NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 17, 2024
    01:23 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை முன்மொழியும் மசோதா, அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024 என்ற தலைப்பில், செவ்வாய்க்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    பிடிஐ கருத்துப்படி, இந்த மசோதா விரிவான விவாதங்களுக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்படலாம்.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார்.

    மத்திய சட்ட அமைச்சர் மக்களவையில் கூறுகையில், மசோதா மீதான கூடுதல் விவாதத்திற்காக இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப அரசு தயாராக உள்ளது எனத்தெரிவித்தார்.

    எதிர்ப்பு

    எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

    காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இது "கொடுமையானது" என்றும், இது "பிராந்தியக் குரல்களை அழித்துவிடும்" என்றும், "கூட்டாட்சியை சிதைக்கும்" என்றும் கூறினார்.

    இது சர்வாதிகார திணிப்பு என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடினார்.

    திமுக எம்பி டிஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு 2/3 பெரும்பான்மை இல்லாதபோது, ​​நாடாளுமன்றத்தில் எப்படி மசோதாவை தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

    காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்த்து, இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை சவால் செய்கிறது என்று கூறினார்.

    ஆதரவு

    மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு கணிசமான ஆதரவு தேவை

    இந்த மசோதா நிறைவேற, அரசுக்கு மக்களவையில் 361 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 154 எம்பிக்களும் ஆதரவு தேவை.

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பிஜு ஜனதா தளம், அதிமுக போன்ற கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேவைப்படும்.

    முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்தியாவின் தேர்தல் செயல்முறையை மாற்றியமைக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது.

    லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குழுவின் அறிக்கை பரிந்துரைத்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒரே நாடு ஒரே தேர்தல்
    எதிர்க்கட்சிகள்
    மக்களவை
    சட்டமன்றம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    ஒரே நாடு ஒரே தேர்தல்

    ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தமிழக முதல்வர்
    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு திரௌபதி முர்மு
    'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல் மக்களவை
    ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; குளிர்கால கூட்டத்தொடரில் பில் நிறைவேற்றப்படும் மத்திய அரசு

    எதிர்க்கட்சிகள்

    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் நாடாளுமன்றம்
    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை இந்திய அணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய திட்டம் மல்லிகார்ஜுன் கார்கே
    வாக்களிப்பது முதல் தினசரி கொடுப்பனவுகள் வரை - இடைநீக்கத்தினால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இழக்கப்போவது என்ன? மத்திய அரசு

    மக்களவை

    ஈரோடு தொகுதி மதிமுக MP கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார் ஈரோடு
    'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர்  தேர்தல்
    மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு  தேர்தல்
    மக்களவை தேர்தல் 2024 2வது கட்ட வாக்குப்பதிவு: முக்கிய போட்டியாளர்கள் யார்? தேர்தல் ஆணையம்

    சட்டமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி தமிழ்நாடு
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு
    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025