NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு

    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023
    03:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகள் கூட்டத்தின் எண்ணிக்கை 4ல் இருந்து 6 ஆக இவ்வருடம் மாற்றப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

    வழக்கமாக ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 தேதிகளில் கிராம சபைகள் நடத்தப்படும்.

    ஆனால் இம்முறை இந்த 4 நாட்களோடு சேர்த்து மார்ச் 22 உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளூர் நிர்வாக தினம் ஆகிய தினங்களிலும் கிராம சபை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, நேற்று(மார்ச்.,22) கிராம சபை கூட்டம் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

    வழக்கமாக 12,521 கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக்கூட்டம், 4 கிராமங்களில் மட்டும் சில சட்ட சிக்கல்களால் ஒத்தி வைக்கப்பட்டது.

    தீர்மானம் நிறைவேற்றம்

    அனைத்து கிராமங்களிலும் ஜல் ஜீவன் திட்டம்

    உலக தண்ணீர் தினத்தன்று நடந்த இந்த கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 22.81 லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதில் 58.6 சதவீதம் பெண்கள், 41 சதவீதம் ஆண்கள் மற்றும் 9,942 மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    இந்த கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம், நீரினை தேவைக்கேற்ப பயன்படுத்துதல், மரம் நடுதல், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்தல், நீரினை மறுசுழற்சி செய்தல், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரத்தினை வளர்த்தல், உடைந்த குழாய்களை சீர் செய்தல், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

    மேலும் அனைத்து கிராமங்களிலும் ஜல் ஜீவன் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி கோவிட் 19
    இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு இந்தியா
    சென்னையில் திடீர் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி சென்னை
    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா அதிமுக

    இந்தியா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் டெல்லி
    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகம்
    கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி கேரளா
    சாம்சங் விவோ கூகுள் பிக்சல் போன்களில் ஏற்பட்ட ஆபத்து! இப்படி ஒரு பிரச்சினையா? ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025