NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு
    இந்தியா

    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு

    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு
    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023, 03:02 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு

    தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகள் கூட்டத்தின் எண்ணிக்கை 4ல் இருந்து 6 ஆக இவ்வருடம் மாற்றப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. வழக்கமாக ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 தேதிகளில் கிராம சபைகள் நடத்தப்படும். ஆனால் இம்முறை இந்த 4 நாட்களோடு சேர்த்து மார்ச் 22 உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளூர் நிர்வாக தினம் ஆகிய தினங்களிலும் கிராம சபை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று(மார்ச்.,22) கிராம சபை கூட்டம் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது. வழக்கமாக 12,521 கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக்கூட்டம், 4 கிராமங்களில் மட்டும் சில சட்ட சிக்கல்களால் ஒத்தி வைக்கப்பட்டது.

    அனைத்து கிராமங்களிலும் ஜல் ஜீவன் திட்டம்

    உலக தண்ணீர் தினத்தன்று நடந்த இந்த கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 22.81 லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 58.6 சதவீதம் பெண்கள், 41 சதவீதம் ஆண்கள் மற்றும் 9,942 மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம், நீரினை தேவைக்கேற்ப பயன்படுத்துதல், மரம் நடுதல், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்தல், நீரினை மறுசுழற்சி செய்தல், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரத்தினை வளர்த்தல், உடைந்த குழாய்களை சீர் செய்தல், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் அனைத்து கிராமங்களிலும் ஜல் ஜீவன் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    இந்தியா

    தமிழ்நாடு

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை கேரளா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை
    அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் உதயநிதி ஸ்டாலின்

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023