NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு
    இந்தியா

    ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு

    ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு
    எழுதியவர் Nivetha P
    Jan 18, 2023, 01:38 pm 0 நிமிட வாசிப்பு
    ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு
    ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன், அண்மையில் மும்பையில் யூனியன் கூட்டத்தினை நடத்தியது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் ஜனவரி 30, 31 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்தது. ஊதிய உயர்வு, பென்ஷன் உயர்வு, வங்கி சேவைக்கு தேவையான ஊழியர்கள் தேர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள். இது குறித்து மத்திய அரசுக்கு நோட்டிஸும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏற்கனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்களின் பண பரிமாற்றம் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கும். மீண்டும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 28, 29ம்தேதிகள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்கள் ஆகும்.

    நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட போராட்டம் அறிவிப்பு

    ஒரே மாதத்தில் 8 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை என்றால் பணம் மற்றும் காசோலை மாற்றும் பணிகள் தேக்கம் அடைந்து சிறு தொழில் செய்வோர், வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்நிலையில் இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறுகையில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்படுகிறது. எனவே, போதுமான ஊழியர்களை பணியமர்த்த வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், தொடர்ந்து 4 நாட்கள் வேலை நிறுத்தம் நிச்சயம் செய்யப்படும் நிலையில், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதோடு காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி மதிப்பில் தேக்கமடையும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    இந்தியா

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாடு
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023