NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு
    ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 18, 2023
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன், அண்மையில் மும்பையில் யூனியன் கூட்டத்தினை நடத்தியது.

    அதன்படி, நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் ஜனவரி 30, 31 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்தது.

    ஊதிய உயர்வு, பென்ஷன் உயர்வு, வங்கி சேவைக்கு தேவையான ஊழியர்கள் தேர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள்.

    இது குறித்து மத்திய அரசுக்கு நோட்டிஸும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ஏற்கனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருந்தது.

    இதனால் பொதுமக்களின் பண பரிமாற்றம் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கும்.

    மீண்டும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 28, 29ம்தேதிகள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்கள் ஆகும்.

    போராட்டம்

    நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட போராட்டம் அறிவிப்பு

    ஒரே மாதத்தில் 8 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை என்றால் பணம் மற்றும் காசோலை மாற்றும் பணிகள் தேக்கம் அடைந்து சிறு தொழில் செய்வோர், வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

    இந்நிலையில் இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறுகையில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்படுகிறது.

    எனவே, போதுமான ஊழியர்களை பணியமர்த்த வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    மேலும், தொடர்ந்து 4 நாட்கள் வேலை நிறுத்தம் நிச்சயம் செய்யப்படும் நிலையில், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதோடு காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி மதிப்பில் தேக்கமடையும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல் இந்தியா
    தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம் இந்தியா
    முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார் மோடி
    போலி செய்திகளை பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம்; மத்திய அரசு அதிரடி யூடியூப் வியூஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025