NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி
    கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி

    கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி

    எழுதியவர் Nivetha P
    Mar 02, 2023
    05:55 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை மிக ஆபத்தானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் இதில் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இமைய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மலைக்கு யாத்திரை சென்றால் கயிலாய மலைக்கு சென்ற பலனை பெறலாம் என சித்தர்கள் கூறியதாக வரலாறு தெரிவிக்கிறது.

    இந்த கோயிலுக்கு சுமார் 50 கி.மீ., தூரம் நடைபயணம் கொண்ட புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்நிலையில் இந்த மலையை ஏறி சாமி தரிசனம் மேற்கொள்ள முயன்ற ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இன்று(மார்ச்.2) நடந்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தை சேர்ந்தவர் எம்.முருகன் என்பவர் வெள்ளையங்கிரி மலையை ஏறி சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

    வழுக்குப்பாறை பகுதி

    திருநெல்வேலியை சேர்ந்த எம்.முருகன் மரணம்

    அதன்படி இன்று(மார்ச்.2) அதிகாலை நேரத்தில் முருகன் மலையடிவாரத்தில் உள்ள பூண்டி கிராமத்தை அடைந்துள்ளார்.

    அங்கிருந்து அவருடன் 10 பேர் இணைந்து வெள்ளையங்கிரி மலையினை ஏற துவங்கியுள்ளனர்.

    ஏழு மலைகள் கொண்ட இந்த பாதையில் ஏழாவது மலை உச்சியில் தான் சிவபெருமான் சுயம்பு லிங்கத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    மலையேற துவங்கிய முருகனுக்கு உயரம் அதிகரிக்க அதிகரிக்க உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அதனையடுத்து அவர் வழுக்குப்பாறை என்னும் பகுதியை அடைந்த நிலையில், அவர் உடல்நலம் மோசமான நிலையை அடைந்துள்ளது.

    அங்கேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்பகுதியில் உள்ள மக்கள் உதவியோடு வனத்துறையினர் உடலை மலையடிவாரத்திற்கு கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: பிப்ரவரி 22- பிப்ரவரி 26 வானிலை அறிக்கை
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா சென்னை
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025