NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்
    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் அமைச்சரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2023
    03:14 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் உதவி காவல் துணை ஆய்வாளரால் நேற்று(ஜன 29) சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மார்பில் பாய்ந்த தோட்டாவால், சுடப்பட்டு சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்தார்.

    அமைச்சரை சுட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர்(ஏஎஸ்ஐ) கோபால் சந்திர தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட இவருக்கு மனநல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    மதியம் 12.30 மணியளவில், அமைச்சர் தனது காரில் இருந்து இறங்கி, புதிதாகக் கட்டப்பட்ட பிஜேடி அலுவலகத்திற்கு செல்ல முயன்ற போது, ​​இந்த காவல்துறை அதிகாரி அவரை துப்பாக்கியால் சுட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் அமைச்சரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஒடிஷா

    யாரிந்த நபா கிசோர் தாஸ்?

    அவர் சுடப்பட்டவுடன் முதலில் ஜார்சுகுடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் விமான ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின், அங்கேயே அவர் உயிரிழந்தார்.

    தாஸ், ஒடிசாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார். மேலும் அவர் வரவிருக்கும் 2024 தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க இருந்தவர் ஆவார்.

    நபா தாஸ் ஜார்சுகுடாவில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக கருதப்படுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸைக் விட்டு பிஜேடிக்கு கட்சி மாறிய இவர், பிஜேடி ஆட்சியில் அமைச்சராக பதியேற்றார்.

    முதல்வர் நவீன் பட்நாயக்கின் புதிய அமைச்சரவை ஜூன், 2022 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் இவரும் ஒருவராவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாநிலங்கள்
    இந்தியா
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு

    இந்தியா

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி கொரோனா
    ஓலா எஸ்1 ப்ரோ முன் சக்கரம் உடைந்து விபத்து! ஐசியூவில் இளம்பெண்; ஆட்டோமொபைல்
    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - காஷ்மீரில் 30ம் தேதி பிரமாண்ட நிறைவு விழா இந்தியா
    டெல்லி வரை அதிர வைத்த நேபாள நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு இந்தியா

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025