NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம்
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம்

    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023
    08:26 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மேம்படுத்தல், விபத்துகளை குறைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக சென்னையில் முக்கிய சாலைகளிலும் பார்க்கிங்'களிலும் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்துள்ள வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    அதன்படி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட அளவுகள், எண்களின் வடிவம் ஆகியவற்றை சரியான முறையில் நம்பர் பிளேட்டுகள் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உடனடியாக அந்த இருசக்கர வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ் அந்த வண்டிலேயே ஒட்டப்படுகிறது.

    ரூ.1500 அபராதமாக விதிக்கப்படும்

    முதலில் சிக்கினால் ரூ.500 அபராதம், மீண்டும் சிக்கினால் 3 மடங்கு அதிகரித்து அபராதம்

    மேலும் நம்பர் பிளேட்டுகளில் போட்டோக்கள் ஒட்டுவது, வாசகங்கள் எழுதுவது, நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை இயக்குவது போன்ற வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது.

    முதல் முறை சிக்கினால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும். அதன் பின்னரும் நம்பர் பிளேட்டை சரி செய்யாவிடில், போலீசில் சிக்கும் பட்சத்தில் மூன்று மடங்காக அபராதம் அதிகரித்து விதிக்கப்படும்.

    அதாவது ரூ.1500 விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

    அதன்படி இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலைய பார்க்கிங் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பார்க்கிங்கில் வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துகளால் அமெரிக்காவில் சர்ச்சை இந்தியா
    அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை அமெரிக்கா
    சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு ரயில்கள்

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025