NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம்
    ஆவணமின்றி ஆதாரில் முகவரி மாற்றம்

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம்

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ புதிய செயல்முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

    அதன் படி, இந்த புதிய செயல்முறையில் ஆதார் பயன்படுத்துவோர் எந்த வகையான ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் தங்கள் முகவரி மாற்றம் அல்லது புதுப்பித்தல் ஆகியவைகளை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    குடும்பதலைவரின் ஒப்புதலுடன் இந்த வசதியை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இது வாடகை வீட்டில் உள்ளோர் மற்றும் திருமணமாகி வேறு வீட்டிற்கு செல்வோருக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதற்கு ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கலாம் அல்லது ஒடிபி அங்கீகாரம் பெற்றும் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல் குடும்ப தலைவரின் ஆதார் எண் அடிப்படையில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் ஆதார் எண்ணில் முகவரியை மாற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

    பின்னர் 30 நாட்களுக்குள் குடும்ப தலைவர் தனது ஒப்புதலை தெரிவிக்கவேண்டும்

    ஆதார் புதுப்பிப்பு/திருத்தம் என்னும் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்

    மேலும் இதுபோன்ற மாற்றத்தை மேற்கொள்ள ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் செல்வது சிறந்தது.

    அங்கு ஆதார் புதுப்பிப்பு/திருத்தம் என்னும் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து நன்கு சரிபார்த்த பின்னர் அங்குள்ள ஆதார் நிர்வாகியிடம் கொடுக்க வேண்டும்.

    இதன் பிறகு படிவம் சமர்ப்பித்த புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) அடங்கிய ஒப்புகை சீட்டை ஆதார் நிர்வாகி நம்மிடம் கொடுப்பார்.

    இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

    இதனையடுத்து, URN எண்ணை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்து கொள்ளலாம்.

    கட்டணம் செலுத்திய பின்னர் குடும்ப தலைவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வரும், குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் அவர் தனது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025