NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி
    எந்த மோதலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்

    'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 22, 2024
    08:12 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி, தனது முக்கிய உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, கொந்தளிப்பான பிராந்தியத்தில் இந்தியா அமைதியை ஆதரிப்பதாக கூறினார்.

    மேலும், அவர் "இது போரின் சகாப்தம் அல்ல" என்றும் எந்த மோதலும் இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

    போலந்து தலைநகர் வார்சாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பல தசாப்தங்களாக, அனைத்து நாடுகளிலிருந்தும் தூரத்தை பராமரிக்கும் கொள்கையை இந்தியா கொண்டிருந்தது என்றார்.

    இருப்பினும், இன்றைய இந்தியாவின் கொள்கை, அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக இருப்பதுதான் என்று அவர் மேலும் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #PMModi addressed the members of Indian community after paying homage at the Monte Cassino Memorial and the Memorial to Kolhapur Family in Warsaw, #Poland.

    Read: https://t.co/Jq4TOTiRzM pic.twitter.com/c607x1nUVy

    — News18 (@CNNnews18) August 22, 2024

    பிரதமர் மோடி

    இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் 

    "பச்சாதாபம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும். எந்த நாட்டிலும் எந்த பிரச்சனை வந்தாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான்...கோவிட் வந்தபோது, ​​இந்தியா முதலில் மனிதநேயம் என்று சொன்னது...மற்ற நாடுகளின் குடிமக்களுக்கு இந்தியா உதவுகிறது" என்று போலாந்திலுள்ள இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார் மோடி.

    "இந்தியா புத்தரின் பாரம்பரியத்தை நம்புகிறது, எனவே, போரை அல்ல, சமாதானத்தை நம்புகிறது...இந்தியா இந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கான ஆதரவாளராக உள்ளது, இது போருக்கான நேரம் அல்ல என்பது தெளிவாகிறது. சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றாக இருக்க வேண்டும். இந்தியா ராஜதந்திரம் மற்றும் உரையாடல்களில் கவனம் செலுத்துகிறது" என்று மோடி தனது போலந்து பயணத்தின் போது கூறினார்.

    இது அவருடைய உக்ரைன் பயணத்திற்கு முன்னர் போர் சூழ்ந்த பிராந்தியத்திற்கான செய்தியாக பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் பயணம்

    போர் சூழ்ந்த தேசத்திற்கு பயணம் செய்யும் முதல் இந்திய பிரதமர்

    1991ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரமடைந்த பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர், உக்ரைனுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் உக்ரைனுக்கு விஜயம் செய்விருக்கும் மோடி, தற்போது நடைபெற்று வரும் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது குறித்து உக்ரைன் தலைவருடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நட்பு நாடுகளின் விமர்சனத்தைத் தூண்டிய ரஷ்யாவுக்கான தனது உயர்மட்ட பயணத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு மோடி உக்ரைனுக்குச் செல்கிறார்.

    பிரதமர் மோடியின் போலந்து பயணம் கடந்த 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    உக்ரைன்
    உக்ரைன் ஜனாதிபதி
    போர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரதமர் மோடி

    மக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும் மக்களவை
    மன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?! ஆந்திரா
    'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை  மக்களவை
    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார் மக்களவை

    உக்ரைன்

    பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழையத் தடை! அமெரிக்கா
    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  ரஷ்யா
    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  ரஷ்யா
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா

    உக்ரைன் ஜனாதிபதி

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன்
    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  ரஷ்யா
    இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை பிரதமர்

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025