NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 
    மனுவை வாபஸ் பெற அனுமதித்த உச்ச நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்தது.

    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2023
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(மே-26) தள்ளுபடி செய்தது.

    மக்களவை செயலகமும், மத்திய அரசும் குடியரசுத் தலைவரை விழாவிற்கு அழைக்காமல் அவமானப்படுத்துவதாக மனுதாரரும் வழக்கறிஞருமான ஜெயா சுகின் வாதிட்டார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த மனு ஏன், எப்படி தாக்கல் செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் புரிந்துகொள்கிறது. ஆனால், அரசியலமைப்பின் 32-வது சட்டபிரிவின் கீழ் இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை" என்று கூறியது.

    details

    நாட்டின் நிர்வாகத் தலைவரான குடியரசு தலைவர் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும்: மனுதாரர் 

    79வது சட்டபிரிவிற்கு கீழ், ஜனாதிபதி நாட்டின் நிர்வாகத் தலைவர் என்றும் அவர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சுகின் கூறினார்.

    மேலும் அவர், இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால், அதை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

    இதனையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்த உச்ச நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்தது.

    வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

    குடியரசுத் தலைவர் ஓரங்கட்டப்படுவதாக கூறி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை 21 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

    இந்நிலையில், இதற்காக தாக்கல் செய்யபட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்
    உச்ச நீதிமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு சென்னை
    கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு  முதல் அமைச்சர்
    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்  பிரதமர் மோடி
    கிரெடிட் கார்டை இணைத்து யுபிஐ பரிவர்த்தனை.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்! கூகுள்

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    உச்ச நீதிமன்றம்

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்  மத்திய அரசு
    திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம் இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா

    மத்திய அரசு

    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  இந்தியா
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  சென்னை
    '40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ் தனுஷ்
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025