NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு
    அடுத்த செய்திக் கட்டுரை

    "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு

    எழுதியவர் Srinath r
    Dec 28, 2023
    09:32 am

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரில் கடை பெயர் பலகைகள் பெரும்பாலும் உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அங்கு நடக்கும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    கன்னடத்தில் அல்லாத பெயர் பலகைகளை கொண்ட கடைகளை, கன்னட குழுக்கள் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர், என்டிடிவியிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

    "எல்லோரும் பெயர் பலகைகளை படிக்க வேண்டும், எல்லோராலும் ஆங்கிலம் படிக்க முடியாது. கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் அல்லது ஹிந்தி போன்ற வேறு மொழியிலும் எழுதுவதால் என்ன தீங்கு? இது இங்கிலாந்து இல்லை" என தெரிவித்தார்.

    வன்முறையை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்தவர், கடை உரிமையாளர்கள், உணர்வை புரிந்துகொள்ள வேண்டுமென பேசினார்.

    2nd card

    சர்ச்சையை கிளப்பிய 60% கன்னட உத்தரவு

    பெங்களூர் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் உள்ள பெயர் பலகைகள், குறைந்தது 60% கன்னடத்தில் இருக்க வேண்டுமென ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே, கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.

    பெயர் பலகைகளை மாற்ற பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. உத்தரவு பின்பற்றப்படாத கடைகள் மீது, தொழில் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அந்த உத்தரவை விரைவாக அமல்படுத்த கோரி பல்வேறு கன்னட அமைப்புகள், நேற்று பெங்களூர் மாநகரம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு, லாவெல்லே ரோடு மற்றும் செயின்ட் மார்க்ஸ் ரோடு, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியும் போராட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கர்நாடகா

    சமீபத்திய

    கூகிள் ஊழியர்களுக்கு இவ்வளவு சலுகைகளா? நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஐந்து சலுகைகள் கூகுள்
    டொனால்ட் டிரம்பின் $5 மில்லியன் 'Gold Card' விசாவிற்கு டிமாண்ட் இல்லையா? டொனால்ட் டிரம்ப்
    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    பெங்களூர்

    பழுதான ஐபோன் 13 மாடலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்ற ஆப்பிள் வாடிக்கையாளர் ஆப்பிள்
    இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்த நோக்கியாவின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க் நோக்கியா
    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்! காவல்துறை
    திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி திருவண்ணாமலை

    கர்நாடகா

    காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்  தமிழ்நாடு
    அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் சித்தராமையா
    காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம்  காவிரி
    இனிப்பான மங்களூர் பன் சாப்பிட்டதுண்டா? இதோ ரெசிபி சமையல் குறிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025