NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு
    இந்தியா

    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு

    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு
    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023, 06:17 pm 0 நிமிட வாசிப்பு
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு

    கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே காக்கநாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 19 சிறார்களுக்கு நோரா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தீடிரென வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த சுகாதாரத்துறையினர் மாணவர்களை சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு பயிலும் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 62 மாணவர்களின் ரத்தமாதிரிகளை சுகாதாரத்துறையினர் எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தொற்று உறுதிசெய்யப்பட்டு, அதிக பாதிப்படைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவரது பெற்றோர்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    தொற்று பாதித்தோர் வீட்டிலேயே ஓய்வெடுக்க அறிவுறுத்தல்

    வைரஸ் கண்டறியப்பட்ட பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த நோரா வைரஸ் தொற்று கழிவுநீரால் பரவக்கூடியது என்பதால் வாந்தி, பேதி இதன் முதல் அறிகுறி ஆகும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அதிகரிக்கும் இந்த தொற்று காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் இணைநோயால் குழந்தைகள் மற்றும் வயதானோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிகம் பரவக்கூடும் தன்மைகொண்டதால் வீட்டிலேயே ஓய்வெடுக்கவும், தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    வைரஸ்
    தொற்று

    சமீபத்திய

    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்

    வைரஸ்

    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    இந்தியாவில் அதிகரிக்கும் தொண்டை வலி மற்றும் வைரல் காய்ச்சலுக்கான காரணங்கள் என்னவென்று மருத்துவர்கள் விவரிக்கின்றார் நோய்கள்
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி

    தொற்று

    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023