NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு 
    'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு

    'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு 

    எழுதியவர் Nivetha P
    Sep 07, 2023
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    நாங்குநேரி சம்பவத்தினை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, மதம் வேறுபாடுகள் ஏதுமின்றி இருக்கவும், இனக்கலவரம் ஏற்படுவதனை தடுக்கவும், நல்லிணக்கம் பேணும் வழிமுறைகளை வகுத்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கவும் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையமானது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில் இவரிடம் செய்தியாளர்கள், 'நீங்கள் தலைமை வகிக்கும் எந்தவொரு ஆணையத்திற்கும் ஊதியம் ஏதும் தேவையில்லை என்று மறுப்பதாக கூறப்படுகிறேதே?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதற்கு பதிலளித்த நீதிபதி கே.சந்துரு, "2013ம் ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுப்பெற்றேன். அதன்பின்னர் இனி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற கூடாது என்னும் முடிவுக்கு வந்தேன்" என்று கூறினார்.

    உயர்நீதிமன்றம் 

    அனுபவம் வீணாகிவிட கூடாது என்பதற்காக நாளிதழ்களில் சட்ட விளக்கம் கொடுத்த நீதிபதி 

    தொடர்ந்து அவர், "ஆனால் 30 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 7 ஆண்டுகள் நீதிபதியாகவும் இருந்ததன் அனுபவம் வீணாகிவிட கூடாது என்னும் நோக்கில் சில நாளிதழ்களில் தொடர்ந்து சட்ட விளக்கங்களை அளித்து வந்தேன்" என்றும் கூறியுள்ளார்.

    அதனையடுத்து அவர், கடந்த 2016ம் ஆண்டில் குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் கட்ட பஞ்சாயத்து செய்வதாக எழுந்த குற்றச்சாட்டினையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் எனது தலைமையில் விசாரணை குழு அமைத்தது.

    அதற்கான அறிக்கையினை அந்தாண்டு நவம்பரில் கொடுத்தேன்.

    அதற்கான எவ்வித ஊதியத்தொகையினையும் நான் பெறவில்லை என்று தெரிவித்தார்.

    இன்ஷுரன்ஸ் கம்பெனி 

    இன்ஷுரன்ஸ் கம்பெனி தொடர்பான வழக்கில் நீதிபதி வற்புறுத்தல் காரணமாக நிர்வாகத்தோகை பெற்ற நீதிபதி சந்துரு 

    இதனைத்தொடர்ந்து, இன்ஷுரன்ஸ் கம்பெனியிடம் வழக்கறிஞர்கள் மோசடி செய்து இழப்பீடு பெறுவதை தடுக்க ஒருநபர் ஆணையமாக கடந்த 2018ல் உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது.

    அதற்கான அறிக்கையினை 2019ல் கொடுத்தேன். இவ்வழக்கின் மூலம் இன்ஷுரன்ஸ் கம்பெனிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதனால் நீதிபதி வற்புறுத்தலின்பேரில், எனக்கான நிர்வாகத்தொகையினை மட்டும் பெற்றுக்கொண்டேன்.

    அதனை தவிர்த்து வேறு எந்தவொரு அரசு பணிக்கும் ஊதியம் பெறக்கூடாது என்று முடிவுச்செய்து அதனை இன்றுவரை கடைபிடித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

    மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் விவசாய மற்றும் தோட்டக்கலை தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டண விகிதம் நிர்ணயம் செய்ய என் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    2020ல் இதற்கான அறிக்கையினை அரசிடம் தாக்கல் செய்தேன், எந்தவொரு கட்டணமும் பெறவில்லை என்றும் கூறினார்.

    ஆச்சர்யம் 

    ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவை கண்டு ஆச்சரியமடைந்த தமிழக முதல்வர் 

    அதேபோல் தற்போதைய திமுக அரசு 2022ல் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தினை கொண்டுவர எனது தலைமையில் ஆலோசனை குழு அமைத்தது.

    2 வாரத்தில் அதற்கான அறிக்கையினை முதல்வரிடம் தாக்கல் செய்த நிலையில், எந்தவொரு சிறப்பு ஊதியமும் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும் அவர், கடந்த 2023ம்ஆண்டு ஏப்ரலில் சிறார் அரசு இல்லங்களை ஒழுங்குபடுத்துவது, சீர்திருத்தங்களை பரிந்துரைப்பது உள்ளிட்டவைகளுக்காக அரசு என்னை நியமித்தது.

    இதற்கான அறிக்கையை இம்மாத இறுதியில் கொடுக்கவுள்ளேன்.

    இதுபோன்ற பணிகளுக்கு ஊதியம் பெறாமல் பணியாற்றுவது ஆத்மத்திருப்தியினை அளிக்கிறது.

    தற்போது நாங்குநேரி சம்பவ எதிரொலியாக அரசு என்னை ஒரு நபர் ஆணையமாக நியமித்துள்ளது.

    இப்பணியையும் எந்தவொரு ஊதியமும் தேவையில்லை என்னும் நிபந்தனையிட்டு தான் ஒப்புக்கொண்டேன்.

    முதல்வர் என்னை கண்டு ஆச்சரியப்பட்டார் என்று பேசியுள்ளார்.

    பொதுசேவை 

    ஊதியம் பெறாமல் பொதுசேவை செய்ய முன்வரவேண்டும் - கே.சந்துரு 

    இறுதியாக அவர் கூறுகையில், "நான் ஓய்வுபெற்ற பின்னர் அரசுடன் நான் செய்த பணிகளுக்கு ஊதியம் வாங்க நினைத்திருந்தால் மாதம் ரூ.2.5 லட்சம் வரை பெற்றிருக்க முடியும். ஆனால் எனக்கு அது தேவையில்லை. எனக்கு ஓய்வூதியம் வருகிறது. செல்லவேண்டிய இடங்களுக்கு வாடகை கார் அல்லது ஆட்டோ மூலம் செல்வேன். தூரம் என்றால் ரயிலில் பயணிப்பேன்" என்று கூறினார்.

    தொடர்ந்து, "அரசிடம் ஊதியம் அல்லது செலவுக்கான தொகை ஏதும் பெறாமல் பொது சேவை செய்ய முடியும் என்பதனை நான் நிரூபித்துள்ளேன். என்னை போல் ஓய்வூதியம் பெறுவோர் இதுபோல் பொது சேவையாற்ற முன்வர வேண்டும் என்றும் விரும்புகிறேன்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்
    ஓய்வூதியம்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    தமிழ்நாடு

    தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும் தமிழக அரசு
    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை மு.க ஸ்டாலின்
    'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்  மு.க ஸ்டாலின்
    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம் சென்னை

    சென்னை உயர் நீதிமன்றம்

    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை
    ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு ஜெயலலிதா
    மீண்டும் சிக்கலில் சிக்கிய விஷால்; 15 கோடி ருபாய் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு கோலிவுட்
    கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு கோலிவுட்

    ஓய்வூதியம்

    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் தொழில்நுட்பம்
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025