NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / '2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    '2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர் 
    செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகும் ரூ.2,000 நோட்டுகள் செல்லுபடியாகும்

    '2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர் 

    எழுதியவர் Sindhuja SM
    May 22, 2023
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ரூ.2,000 நோட்டுகளை மாற்ற யாரும் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கியின்(RBI) கவர்னர் சக்திகந்த தாஸ் இன்று(மே-22) தெரிவித்துள்ளார்.

    நாளை முதல் ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் திரும்ப பெற இருக்கும் நிலையில், RBI கவர்னர் சக்திகந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகும் ரூ.2,000 நோட்டுகள் செல்லுபடியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

    "இப்போது வங்கிகளுக்கு விரைந்து செல்ல எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு செப்டம்பர் 30 வரை நான்கு மாதகால அவகாசம் உள்ளது" என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறி இருக்கிறார்.

    இப்படி ஒரு காலக்கெடுவை கொடுத்தால், மக்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு நோட்டுகளை திரும்பப் பெற முயற்சி செய்வார்கள் என்பதற்காகவே அது கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    details

    போதுமான கரன்சி நோட்டுகள் கையிருப்பில் இருக்கிறது: சக்திகந்த தாஸ்

    "ரூ.2,000 நோட்டுகளை மாற்ற தேவையான ஏற்பாடுகள் வங்கிகளில் செய்யப்பட்டுள்ளது. போதுமான கரன்சி நோட்டுகள் கையிருப்பில் இருக்கிறது." என்று சக்திகந்த தாஸ் கூறியுள்ளார்.

    இந்திய ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

    மேலும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மக்கள் அவற்றை மாற்றிக்கொள்ளலாம் அல்லது தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

    இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் பிற வங்கிகள், மே 23ஆம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகளை பெற்றுக்கொள்ளும்.

    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த படிவமும், அடையாளச் சான்றும் தேவையில்லை என்று இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி(SBI) நேற்று தெளிவுபடுத்தி இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா

    இந்தியா

    கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது கர்நாடகா
    அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு! பள்ளி மாணவர்கள்
    பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்!  போக்குவரத்து விதிகள்
    சர்வதேச அருங்காட்சியக தினம் 2023: இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் டெல்லி

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025