NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம்
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம்

    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Jun 01, 2023
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கரகாட்டம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி கோரப்பட்டு திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தனித்தனியே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    கோயில் திருவிழாக்களின் போது நடத்தப்படும் இது போன்ற ஆடல் பாடல், நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே நீதிமன்றமும், காவல்துறையும் விதிமுறைகளை வகுத்துள்ளது.

    இந்த மனுக்கள் அண்மையில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர்கள் அனுமதி கோரினால் காவல்துறை பதில் அளிக்காமல் உள்ளதாக கூறினர்.

    ஆடல் பாடல் 

    புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என கருத்து 

    இதனையடுத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரினால் மனு தந்த 7 நாட்களில் அனுமதி தர வேண்டும், அல்லது இல்லை என்று பதிலளிக்க வேண்டும்.

    அப்படி கூறாவிட்டால், அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், அனைத்து மாவட்டத்தின் எஸ்.பி.களுக்கும் இதுகுறித்து புது சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்திருந்தது.

    இந்நிலையில், தற்போது இந்த வழக்கு இன்று(ஜூன்.,1) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், ஆடல் பாடல் நிகழ்வு குறித்து புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விசாரிக்க வேண்டியதில்லை.

    முன்பு கூறியவாறு மனு தந்த 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்.

    இனி இதுகுறித்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    உயர்நீதிமன்றம்
    திருவிழா

    சமீபத்திய

    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்

    தமிழ்நாடு

    பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி தமிழக அரசு
    தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!  பள்ளி மாணவர்கள்
    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி   திமுக
    கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர் கோவை

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025