NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி
    இந்தியா

    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி
    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023, 06:04 pm 1 நிமிட வாசிப்பு
    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி
    அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

    சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறையின் 24 மணி நேர உதவி மையத்தை துவக்கி வைக்க அமைச்சர் சேகர்பாபு இன்று அங்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, கோயில் தொடர்பான ஆலோசனை மற்றும் குறைகளை பொதுமக்கள் தெரிவிக்க 1800 425 1757 என்ற தொலைபேசி எண்ணையும் அவர் அறிமுக செய்து வைத்தார். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருக்கோயில்களில் நடக்கும் சிறு பிரச்சனைகளை கூட உடனே தீர்த்து வைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள் உரிய முறையில் நிவர்த்தி செய்யப்படும் என்றும், முதல் கட்டமாக 1000 திருக்கோயில்களில் இந்த புகாரளிக்கும் தொலைபேசி எண் சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    நடராஜர் கோயிலில் அத்துமீறல் இல்லாமல் நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்- சேகர்பாபு

    தொடர்ந்து பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், அழுத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அறநிலையத்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் ஆதாரபூர்வமாகவே எடுக்கப்படுகிறது என்று கூறினார். மேலும், 'நடராஜர் கோயிலை கையகப்படுத்துவது அரசின் நோக்கம் அல்ல, அத்துமீறல் இல்லாமல் நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்' என்றும் தெரிவித்தார். திருக்கோயில்களில் பயன்படுத்த முடியாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றுவது முன்மாதிரி திட்டமாகும். எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் அந்த திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தீட்சிதர்கள் இது குறித்து நீதிமன்றம் செல்வோம் என்று கூறிய நிலையில் அவர்கள் இதுவரை நீதிமன்றத்தை அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சேகர் பாபு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா
    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு
    ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்! அப்போ ரோஹித் சர்மா நிலை? ஐபிஎல் 2023
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு இந்தியா

    சேகர் பாபு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் வைரல் செய்தி
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023