NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எந்த இந்திய மொழியும் தமிழுக்கு இணையில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எந்த இந்திய மொழியும் தமிழுக்கு இணையில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி 
    எந்த இந்திய மொழியும் தமிழுக்கு இணையில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி

    எந்த இந்திய மொழியும் தமிழுக்கு இணையில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி 

    எழுதியவர் Nivetha P
    Sep 23, 2023
    04:01 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் இன்று(செப்.,23) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார் என்று கூறப்படுகிறது.

    அதில் அவர் பேசுகையில், "எந்த இந்திய மொழியும் தமிழ் மொழிக்கு இணையானது இல்லை. தமிழ் மொழியோடு ஓரளவுக்கு இணையானது என்றால் சமஸ்கிரத மொழியினை கூறலாம்" என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர், "தமிழ்நாடு மாநிலத்திற்கு வருவதற்கு முன்னர் தமிழின் தொன்மையான வரலாறு குறித்து எதுவும் எனக்கு தெரியாது" என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    தமிழ் மொழி கற்பதன் ஆரம்ப நிலையில் தான் உள்ளதாக கூறிய கவர்னர், தமிழ் இலக்கியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    கவர்னர் 

    மொழி தான் மக்களின் ஆன்மாவாக உள்ளது - கவர்னர் 

    இதனை தொடர்ந்து பேசிய அவர், 'திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூலினை படிக்க துவங்கிய பின்னரே எனக்கு தமிழ்மொழி மீதான ஆழமான அன்பு ஏற்பட்டது. தமிழில் கூறப்படும் அறம் என்னும் சொல்லிற்கு இணையான சொல் வேறு மொழியில் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து அவர், ஒரு மொழி தான் மக்களின் ஆன்மாவாக உள்ளது, அதே மொழி தான் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையான வரலாற்றினை எடுத்துரைக்க உதவுகிறது என்று பேசியுள்ளார்.

    கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மீகம் ஆகிவிடாது, ஒரு உயிரினம் கஷ்டப்படுவதை கண்டு கவலையடைவதும் ஆன்மீகம் தான் என்று கூறிய கவர்னர், தமிழ் மொழியினை மொழிபெயர்ப்பு செய்து மற்ற மொழியினருக்கு வழங்குவது என்பது அருமையான பணியாகும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    கவர்னர்
    சென்னை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை

    கவர்னர்

    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் தமிழ்நாடு
    புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு  புதுச்சேரி
    தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி  தமிழ்நாடு

    சென்னை

    நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை  கொரோனா
    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு கேரளா
    தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை  பண்டிகை
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேமுதிக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025