NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை 
    இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

    இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை 

    எழுதியவர் Nivetha P
    May 17, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளது.

    அதில் ஒன்று தான் எஸ்.எப்.ஜே., இந்த அமைப்பானது பல்வேறு சட்டவிரோத செயல்களில் செயல்பட்டு வந்ததால், மத்திய அரசு இந்த அமைப்பினை தடை செய்தது.

    இந்த அமைப்பின் தலைவர் குர்பத் சிங், இவருக்கு நெருக்கமானவர் ஜஸ்விந்தர் சிங் முல்தானி.

    கடந்த ஆண்டு சண்டிகர் பகுதியில் உள்ள மாடல் புரைல் ஜெயில் அருகே நடந்த குண்டுவெடிப்புக்கும் இவனுக்கும் தொடர்புண்டு.

    மேலும் லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் மூளையாக இவன் செயல்பட்டுள்ளான் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்ட பொழுது விவசாயிகள் தலைவர் பல்வீர் சிங்கை கொல்லவும் இவன் சதி திட்டம் தீட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சோதனை 

    பயங்கரவாதத்தில் ஈடுபட்டது, போதைப்பொருள் கடத்தல் போன்ற 5 வழக்குகள் பதிவு

    இந்நிலையில் ஜஸ்விந்தர் சிங்கை ஜெர்மனியில் கைது செய்த நிலையில், அவன் மீது பயங்கரவாதத்தில் ஈடுபட்டது, போதைப்பொருள் கடத்தல் போன்ற 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஜஸ்விந்தர் சிங்கின் கூட்டாளிகள் வீடுகளிலும் தற்போது என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

    அதனை தொடர்ந்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தங்கள் சோதனையினை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து தற்போது வரை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    என்ஐஏ
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை தமிழ்நாடு
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  திண்டுக்கல்

    இந்தியா

    கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்: டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் கட்சி கூட்டம் காங்கிரஸ்
    சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட் காவல்துறை
    மெர்சிடீஸ் பென்ஸாக மாறிய டாடா சுமோ.. வைரலான வீடியோ! எஸ்யூவி
    இந்தியாவில் ஒரே நாளில் 801 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025