NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஃபெஞ்சல் புயல் வெள்ளப்பெருக்கு: ரூ.16 கோடியில், கட்டிய 3 மாதத்தில் இடிந்து உடைந்த தென் பெண்ணையாற்று பாலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபெஞ்சல் புயல் வெள்ளப்பெருக்கு: ரூ.16 கோடியில், கட்டிய 3 மாதத்தில் இடிந்து உடைந்த தென் பெண்ணையாற்று பாலம்
    கட்டிய 3 மாதத்தில் இடிந்து உடைந்த தென் பெண்ணையாற்று பாலம்

    ஃபெஞ்சல் புயல் வெள்ளப்பெருக்கு: ரூ.16 கோடியில், கட்டிய 3 மாதத்தில் இடிந்து உடைந்த தென் பெண்ணையாற்று பாலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 03, 2024
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலையில், தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதங்களில் இடிந்து விழுந்தது. இது, மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சாத்தனூர் அணையில் பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்பட்டபோது, அகரம்பள்ளிப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள், தென் பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் பெரும் சிக்கலுக்கு உள்ளானனர்.

    இதனால், அவர்கள் சுமார் 15 கி.மீ. தூரம் சுற்றி, வேறு ஊர்கள் வழியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதற்குப் பின்னர், அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்க, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | விழுப்புரம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துச் செல்வதால் அப்பகுதிக்குச் செல்ல மக்களுக்குத் தடை!#SunNews | #Viluppuram pic.twitter.com/ETZ7Wv5ceJ

    — Sun News (@sunnewstamil) December 3, 2024

    புதிய பாலம்

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்

    தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட இந்த பாலம் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    ஆனால், தற்போது கடந்து சென்ற ஃபெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர அணை வேகமாக நிரம்பி, அதன் சுமார் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதனால், பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

    இதன் ஒரு பகுதியாக, அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் பாலமும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனது.

    இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதிகாரிகள் தரத்தை பரிசோதனை செய்யவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்  பிறந்தநாள்
    சித்ரா பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!  சென்னை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  காவல்துறை
    திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025