NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம்
    தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம்

    தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Mar 02, 2023
    07:17 pm

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவதில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

    இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்குக்கான தீர்ப்பானது இன்று(மார்ச்.,2) அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும்.

    பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலம் தேர்தல் ஆணையர்கள் இனி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    அதே போல், தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டுமானாலும் இதே வழிமுறையையே கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்றம்

    தற்போதைய தேர்தல் ஆணையர் நியமன நடைமுறை ரத்து

    இதனை தொடர்ந்து, தற்போதைய தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நிர்வாக தலையீட்டிலிருந்து தேர்தல் ஆணையத்தை மீட்க வேண்டிய அவசியம் தற்போது உண்டாகியுள்ளது.

    அரசு தலையிட்டு அவர்களை நீக்கம் செய்யாதபடி தேர்தல் ஆணையத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.

    அரசியல் நிர்வாகங்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும், எந்த தலையீடும் இல்லாமல் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

    சிபிஐ இயக்குனர் தேர்வு செய்வது போல தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு
    மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025