NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் 
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 24, 2023
    11:51 am

    செய்தி முன்னோட்டம்

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் மோத தொடங்கியுள்ளன.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்து மூன்றாவது வேலை நாள் இன்று தொடங்கி இருக்கும் நிலையில், பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸை சமர்ப்பித்துள்ளனர்.

    மேலும், மணிப்பூரில் அதிகரித்து வரும் கொடூரமான குற்றங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே கூடியுள்ளனர்.

    அதே நேரத்தில், மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சிக் கூட்டணியான INDIAவைச் சேர்ந்த எம்.பி.க்களும் காந்தி சிலை அருகே திரண்டுள்ளனர்.

    பிரோஜ்

     நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவார் என்று பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனினும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளை எதிர்த்து, பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றன.

    இதனால், ஜூலை 20ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

    மணிப்பூரில் நிலவும் அமைதியின்மை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

    ஆனால், அரசாங்கம் "குறுகிய கால விவாதத்திற்கு" மட்டுமே இதுவரை ஒப்புக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    மக்களவை
    மாநிலங்களவை
    எதிர்க்கட்சிகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நாடாளுமன்றம்

    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி
    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு

    மாநிலங்களவை

    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு இந்தியா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு  திரிணாமுல் காங்கிரஸ்

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பாஜக
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  அரசியல் நிகழ்வு
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025