NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர்
    'தாய்மண் வீடு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள வீடு

    தாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 26, 2023
    11:00 am

    செய்தி முன்னோட்டம்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் சிவில் இன்ஜினியர் ஒருவர், தனது சொந்த கிராமமான அன்னமங்கலத்தில், முழுக்க முழுக்க மண்ணால் வீடு கட்டி அசத்தியுள்ளார்.

    இந்த வீடு கட்டுவதற்கு சிமெண்ட், கான்கிரீட் போன்றவை முற்றிலுமாக பயன்படுத்தப்படவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

    "'தாய்மண் வீடு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீட்டை கட்டி முடிக்க எனக்கு 3 வருடங்கள் ஆனது. இங்கிருந்து 30 மீட்டர் சுற்றளவில் எடுக்கப்பட்ட மண்ணால் மட்டுமே இந்த வீடு கட்டப்பட்டிருப்பதால் இதற்கு இந்த பெயரை வைத்தேன். இதை மலிவான வீடு என்று சொல்லி விட முடியாது. 1100 சதுர அடியில் உள்ள இந்த வீட்டை கட்டுவதற்கு குறைந்தபட்சம் ரூ.17 லட்சம் செலவானது." என்று இந்த வீட்டு உரிமையாளர் ஜெகதீசன் கூறியுள்ளார்.

    பெரம்பலூர்

    மின்சார செலவுகளை மிச்சப்படுத்தும் வீடு

    சிவப்பு மண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத செங்கற்களால் எப்படி வீடு கட்டுவது என்பதை கற்றுக்கொள்ள புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஜெகதீசன் பயிற்சிக்கு சென்றிருக்கிறார்.

    அங்கு கம்ப்ரஸ்டு ஸ்டேபிலைஸ்டு எர்த் பிளாக்ஸ்(CSEB) மற்றும் ஆர்ச் வால்ட் டோம்(AVD) ஆயிவற்றை எப்படி செய்வது என்பதை அவர் கற்றுக்கொண்டார்.

    உலோகம் மற்றும் சிமென்ட் அடிப்படையிலான மோல்டிங்கின் பயன்பாட்டைக் குறைக்க, குறைந்தபட்சம் 10,000 சுடப்படாத செங்கற்களைக் கொண்டு வால்ட் மற்றும் வளைவு கூரைகள் செய்யப்படுகின்றன.

    சுடப்படாத செங்கற்களாலேயே இந்த வீடு கட்டப்பட்டுள்ளதால் இந்த வீடு, குளிர் காலத்தில் இதமாகவும் வெயில் காலத்தில் ஜில் என்றும் இருக்கும் என்று இதை பார்த்து பார்த்து வடிவமைத்த ஜெகதீசன் கூறியுள்ளார். இதனால், இந்த வீட்டிற்கான மின்சார செலவு 20 ரூபாய்க்குள் முடிந்துவிடுகிறதாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்
    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி

    தமிழ்நாடு

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் திண்டுக்கல்
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 20- பிப்ரவரி 24 வானிலை அறிக்கை
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி
    தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஓலா

    மாவட்ட செய்திகள்

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் வாகனம்
    16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025