NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! 
    மும்பை கட்டிட விபத்தில் சிக்கியவர்கள் மேலும் 6 பேர் பிணமாக மீட்பு

    மும்பை கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! 

    எழுதியவர் Siranjeevi
    May 01, 2023
    01:57 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பை அருகே கட்டிட விபத்தில் சிக்கிய மேலும் 6 பேர் உயிரிழந்ததாகவும், மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மும்பை அடுத்த தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள வால்பாடா பகுதியில் அமைந்துள்ள வார்தமான் காம்பவுண்டில் 3 மாடி குடோன் கட்டிடமானது கடந்த நாள் முன்தினம் இடிந்து விழுந்துள்ளது.

    இடிந்த கட்டிடத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்கள் நவீன உபகரணங்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மும்பை 

    மும்பை பிவண்டி கட்டிட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

    தொடர்ந்து, 20 மணி நேரமாக போராடிய மீட்புப்பணியினர், ஒருவரை உயிருடன் மீட்டனர்.

    அதேப்போல் இரவு முதல் காலை வரை 6 பேரை பிணமாக மீட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

    தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை கட்டிட உரிமையாளர் இந்திராபால் பாட்டீல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும், இடிபாட்டுக்கு காரணமாக கட்டிடத்தின் மீது செல்போன் கோபுரம் வைக்கப்பட்டதாகவும் எடை தாங்காமல் கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி

    இந்தியா

    திரையரங்கில் லேப்டாப்பில் வேலை செய்த நபர் - வைரலாகும் வீடியோ!  ட்ரெண்டிங் வீடியோ
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது உச்ச நீதிமன்றம்
    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் பிவி சிந்து
    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்!  ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025