NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்
    இந்தியா

    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்

    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2023, 10:26 am 1 நிமிட வாசிப்பு
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்
    இம்முறை இந்த தோட்டங்கள் சுமார் இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும்.

    இந்திய குடியரசு தலைவரின் மாளிகையில் உள்ள தோட்டங்கள் இன்று(ஜன 28) 'அம்ரித் உத்யன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு முன் இது முகலாயத் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. "சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்று கொண்டாடுவதால், ​​ராஷ்டிரபதி பவன் தோட்டத்திற்கு 'அம்ரித் உத்யன்' என்று ஒரு பொதுவான பெயரை வைப்பதில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மகிழ்ச்சியடைகிறார்" என்று ஜனாதிபதியின் துணை செய்தி செயலாளர் நவிகா குப்தா ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

    அம்ரித் உத்யன் ஜனவரி 31 முதல் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது

    ஆண்டுக்கு ஒருமுறை இந்த தோட்டம் பொது மக்களுக்கு திறக்கப்படும். இம்முறை பொது மக்கள் ஜனவரி-31 முதல் இந்த தோட்டங்களை பார்வையிடலாம். இது மார்ச்-26 வரை திறந்திருக்கும். ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ இணையதளம் தோட்டத்தின் விவரங்களைப் பகிர்ந்துள்ளது. "15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் அம்ரித் உத்யன் தோட்டம், குடியரசுத் தலைவர் மாளிகையின் உயிர் என்று கூறினாலும் மிகையாகாது. அம்ரித் உத்யன், ஜம்மு-காஷ்மீரின் முகலாய தோட்டங்கள், தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள தோட்டங்களை போல அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்தியா மற்றும் பாரசீகத்தின் சிறு ஓவியங்கள் கூட பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இம்முறை இந்த தோட்டங்கள்(மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம், மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்டத் தோட்டம்) இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    திரௌபதி முர்மு

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    இந்தியா

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை

    திரௌபதி முர்மு

    வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு கேரளா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா
    சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் இந்தியா
    பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023