Page Loader
சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?
சமஸ்கிருதம் மற்றும் தமிழுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள்(படம்: Oneindia Tamil)

சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?

எழுதியவர் Sindhuja SM
Dec 29, 2022
06:10 pm

செய்தி முன்னோட்டம்

பழமையான மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்னென்ன செய்திருக்கிறது என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இது குறித்து, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மக்களவையில் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், கீழுள்ள தகவல்களைக் கூறி இருக்கிறார்: 1. தமிழ் மற்றும் சமஸ்கிருதத்திற்கு தனி இருக்கை அமைக்க இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சில் மூலம் 8 சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2. போலந்து பல்கலையில் தமிழுக்காக தனி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. 3. தமிழ் வளர்ச்சிக்காக சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்(சிஐசிடி) உருவாக்கப்பட்டுள்ளது.

மொழி மேம்பாடு

நிதி ஒதுக்கீட்டு விவரங்கள்:

மேலும், இந்த கடிதத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கும் டெல்லி மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறி இருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி: மொத்தம்: தமிழ்- ரூ.74.10 கோடி, சமஸ்கிருதம்- ரூ.1,488.90 கோடி ஆண்டு வாரியான நிதி: நிதியாண்டு தமிழுக்காக ஒதுக்கப்பட்ட நிதி (லட்சங்களில்) சமஸ்கிருதத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி(லட்சங்களில்) 2014-15 827.36 12580.00 2015-16 1199.68 16147.36 2016-17 510.44 14919.74 2017-18 1067.63 19831.06 2018-19 465.25 21437.99 2019-20 980.78 24699.28 2020-21 1173.00 19285.07 2021-22 1186.15 19883.16