NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது
    சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது

    எழுதியவர் Sindhuja SM
    Dec 10, 2022
    01:17 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று மாலை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டிருந்தது சிறப்பு பாதையும் தற்போது சேதம் அடைந்துள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி 1.14 கோடி செலவில் மாற்றுதிறனாளிகளுக்கான இந்த சிறப்புப் பாதை மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டது.

    திறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த பாதை இப்போது சேதம் அடைந்துள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதையை அனைவரும் உபயோகிப்பதாக நடுவில் ஒரு பெரும் சர்ச்சை வேறு ஏற்பட்டது.

    கடல் சீற்றம்

    புயலால் தொடர் சேதங்கள்!

    இது போக, மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக நெம்மேலிக்குப்பத்தில் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. கடல் அரிப்பு இப்படியே தொடர்ந்தால் கோயில் முழுவதுமாக அடித்து செல்ல வாய்ப்புள்ளது என்பதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட கடலோர ஊர்களில் தாழ்வானபகுதிகளில் உள்ள சுமார் 500 வீடுகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

    கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழைப் பெய்வதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது.

    மேலும், மாண்டஸ் புயல் காரணமாக குமரி மற்றும் தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியுள்ளது. இதனால், மக்களும் சுற்றுலா பயணிகளும் திகைப்படைந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை
    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025