
இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் பாகிஸ்தான் குறித்து ஒரு வலுவான மெசேஜ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, பாகிஸ்தான் திரும்பவும் அத்துமீறி ஏதேனும் செய்தால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா மிகுந்த பலத்துடன் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
சமீபத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கும் இடையே ராணுவ பதட்டங்கள் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களுக்கும் இந்தியா உரிய பதிலடி கொடுத்தது.
இதன்பின்னர், சனிக்கிழமை (மே 10) பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இரு தரப்பிலும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.
அமெரிக்கா
அமெரிக்கா மூலம் பாகிஸ்தான் தூது
இந்த விவாதத்தை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, இந்தியா அமைதியைப் பேணுவதில் உறுதியுடன் இருந்தாலும், பாகிஸ்தான் மேலும் ஏதேனும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினால் தீர்க்கமான மற்றும் பேரழிவு தரும் பதிலை வழங்க தயங்காது என்று மோடி வலியுறுத்தி உள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டுமே பிரச்சினையாக உள்ளது என்றும், இதில் எந்த மூன்றாம் நாட்டு தலையீட்டையும் இந்தியா ஏற்காது என்று கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து புல்லட் வந்தால், இந்தியா தரப்பில் இருந்து ஷெல் தாக்குதல் இருக்கும் எனவும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும், இனி பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி இப்படித்தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.