
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
வேலூர், சென்னை போன்ற இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக வேலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக 1-5 வரையிலான ஆரம்பப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் மிதமான மழை பெய்வதால், பள்ளிகளும் கல்லூரிகளும் வழக்கம் போல இயங்கும் என சென்னை கலெக்டர் அறிவித்தார்.
இந்த நிலையில், குறிப்பாக, KTCC என குறிப்பிடப்படும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ஆகிய மாவட்டங்களில், இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள், மேற்கு திசை காற்றின் காரணமாக இன்று மாலை அல்லது இரவில் சென்னையில் மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
10 மணி வரை மிதமழைக்கு வாய்ப்பு
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2023-09-21-07:38:05 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக ஆற்காடு,பெரம்பூர்,புரசைவாக்கம்,சோளிங்கர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/sMsPHteDqm
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 21, 2023
ட்விட்டர் அஞ்சல்
10 மணி வரை மிதமழைக்கு வாய்ப்பு
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2023-09-21-08:08:08 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அரக்கோணம்,வாலாஜாபாத்,காஞ்சிபுரம்,சோழிங்கநல்லூர்,ஸ்ரீபெரும்புதூர்,திருக்கழுகுன்றம்,திருப்போரூர்,திருவள்ளூர்,வண்டலூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/s9Eg8M9Gst
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 21, 2023