NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி 
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி 

    எழுதியவர் Nivetha P
    Jul 08, 2023
    02:20 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கந்தன்சாவடி பகுதியிலுள்ளவர் ப்ரீத்தி(23), இவர் பி.காம்.,படித்து முடித்துவிட்டு தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் கேர்ளாக பணியாற்றி வந்துள்ளார்.

    இதனிடையே, ப்ரீத்தி கடந்த 2ம்தேதி தனது பணியினை முடித்துவிட்டு மின்சார ரயில் மார்க்கமாக வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது இந்திரா நகர் ரயில் நிலையத்தின் அருகே ப்ரீத்தியின் செல்போனை பறித்த 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்கள்.

    அவர்கள் போனை பறிக்கும்பொழுது அப்பெண்ணையும் வேகமாக இழுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

    இதனால் நிலை தடுமாறி அப்பெண் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    கீழே விழுந்த ப்ரீத்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, அங்கிருந்தோர் உடனே அருகிலிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார்கள்.

    பலி 

    சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் 

    பின்னர் இது குறித்து வழிப்பறி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, திருவான்மியூர் ரயில்வே காவல்துறை அந்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    அவர்கள் பறித்துச்சென்ற செல்போனை டிராக் செய்ததில் அடையாறில் உள்ள மணிமாறன் மற்றும் பட்டினம்பாக்கம் பகுதியினை சேர்ந்த விக்னேஷ்(27) ஆகியோரை கண்டுபிடித்து திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர் நேற்று(ஜூலை.,7) இரவில் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ரீத்தி இன்று(ஜூலை.,8) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து தற்போது கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    சென்னை

    செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை  தமிழ்நாடு
    ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார் தகவல்  தமிழ்நாடு
    அறுவை சிகிச்சை நிறைவு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது தமிழ்நாடு
    சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  இந்தியா
    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன் இந்தியா
    சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்  நாம் தமிழர்
    டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது  டெல்லி

    காவல்துறை

    ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை  காவல்துறை
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம்  சென்னை
    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது  ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025