NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர்
    நூதன முறையில் 50 லட்சம் மோசடி

    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர்

    எழுதியவர் Nivetha P
    Dec 17, 2022
    11:21 am

    செய்தி முன்னோட்டம்

    உங்கள் ஓ.டி.பி.-யை யாரிடமும் பகிராதீர்கள் என்றும், கால், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் கூட ஒன் டைம் பாஸ்வேர்ட்-ஐ கேட்டு இணைய மோசடிகள் நடப்பது குறித்தும் அவ்வபோது சைபர் க்ரைம் அதிகாரிகளால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஷம்ஷேர் சிங் என்பவரது செல்போனிற்கு பலமுறை பிளாங்க் மற்றும் மிஸ்டு கால் வந்துள்ளது. அவர் சில அழைப்புகளைப் புறக்கணித்த நிலையில் தொடர் அழைப்புகள் வந்த காரணத்தால் ஒரு அழைப்பை எடுத்துள்ளார்.

    ஆனால், மறுபுறம் யாரும் பேசவில்லை. அதன் பின்னர் அவருடைய செல்போனில் குறுஞ்செய்தியை சோதித்தபோது, அவருடைய கணக்கிலிருந்து 50 லட்சம் ரூபாய் பிற கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை கண்டு அதிர்ந்துள்ளார்.

    சைபர் க்ரைம் (IFSO) பிரிவு விசாரணை

    பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கை சைபர் க்ரைம் (IFSO) பிரிவு தற்போது விசாரித்து வருகிறது.

    அதன்படி அவர்களின் முதற்கட்ட விசாரணையில் ஷம்ஷேர் சிங் வங்கி கணக்கில் இருந்து கொள்ளையடித்த சைபர் கொள்ளையர்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும், சிம் ஸ்வாப்பிங் டெக்னாலஜியின் மூலம் பாதிக்கப்பட்டவரின் செல்போனை கட்டுக்குள் கொண்டுவந்து சைபர் கொள்ளை கும்பல் இவ்வாறு பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சிம் ஸ்வாப் என்றால் ஒருவருடைய சிம் கார்ட்-ஐ, நகல் (Duplicate) செய்து அதன் மூலம் ஒரே நேரத்தில் நிஜ உரிமையாளரின் அழைப்புகள், குறுஞ்செய்தி-களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தொழில்நுட்பம்
    டிரெண்டிங்

    சமீபத்திய

    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா

    தொழில்நுட்பம்

    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா இந்தியா

    டிரெண்டிங்

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு விஜய் டிவி
    யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி டிடிஎஃப் வாசன்
    டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம் தமிழ் திரைப்படம்
    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025