NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் பொன்முடி வகித்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் பொன்முடி வகித்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு 
    அமைச்சர் பொன்முடி வகித்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு

    அமைச்சர் பொன்முடி வகித்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு 

    எழுதியவர் Nivetha P
    Dec 21, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

    அதனை தொடர்ந்து அவர்களது தண்டனை குறித்த விவரங்கள் இன்று(டிச.,21) வெளியானது.

    அதற்கு முன்னதாக பொன்முடி சார்பான வழக்கறிஞர், அமைச்சரின் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

    இதனை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    எனினும், அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை விதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஒதுக்கீடு 

    முதல்வரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கிய தமிழக ஆளுநர் 

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோயுள்ளது.

    மேலும், இவர் வசம் இருந்த உயர்கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உள்ளிட்டவை மூத்த அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ராஜகண்ணப்பன் வசம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் காதி, கிராம தொழில்கள் துறைகள் இருந்தது.

    இதில் காதி மற்றும் கிராம தொழில்கள் துறை மற்றொரு கைத்தறித்துறை அமைச்சரான ஆர்.காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்த பரிந்துரைகளை மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு செய்த நிலையில், ஆளுநர் இவைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    கூடுதல் பொறுப்புகள் 

    #BREAKING | அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பு - ஆளுநர் ஒப்புதல்#SunNews | #Ponmudy | #Rajakannappan | #RGandhi pic.twitter.com/pSardhNQ1F

    — Sun News (@sunnewstamil) December 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிறை
    சென்னை உயர் நீதிமன்றம்
    மு.க ஸ்டாலின்
    ஆர்.என்.ரவி

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி
    நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படங்கள் நீக்கப்படாது: சென்னை உயர்நீதிமன்றம்  முதல் அமைச்சர்
    ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு  உச்ச நீதிமன்றம்
    384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை சென்னை

    மு.க ஸ்டாலின்

    காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை தமிழக அரசு
    நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் சென்னை
    Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை? திருவண்ணாமலை

    ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு அரசுடன் மோதல் - 4 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்  மு.க ஸ்டாலின்
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை  சேலம்
    செந்தில் பாலாஜி விவகாரம் - சட்ட வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை  மின்சார வாரியம்
    எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்? வைரலாகும் ஆளுநர் ரவியின் கடிதங்கள்  செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025