NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு

    சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 06, 2024
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசின் சமீபத்திய முடிவின்படி, ஆறுகள், கால்வாய்கள், மற்றும் ஓடைகளில் கிடைக்கும் நீரைக் கொண்டு உள்ளூர் மின் உற்பத்தியை ஊக்குவிக்குமாறு சிறிய அளவிலான சிறுபுனல் மின் திட்டங்களை உருவாக்குவதற்கான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

    எரிசக்தி துறை செயலர் (பொறுப்பு) பிரதீப் யாதவ் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில், புதிய கொள்கை குறித்து கூறியுள்ளதாவது:

    தமிழ்நாடு அரசு, 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான மின்நிலைய திறனை கொண்ட சிறு புனல் மின் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

    இது உள்ளூர் மின் உற்பத்திக்கான வாய்ப்புகளை வழங்குவதுடன், ஊரக பகுதிகளில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

    சிறப்பம்சங்கள்

    இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

    இந்த கொள்கை கார்பன் உமிழ்வை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் தரமான மின்வளங்களை உருவாக்குவதை ஊக்குவிக்கும்.

    கால்வாய்கள், ஆறுகள், மற்றும் ஓடைகளில் இருந்து தடையற்ற மின்சாரம் கிடைக்க ஊக்குவிக்கும்.

    நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிசக்திகளுக்கு மாறாக சிறுபுனல் மின் திட்டங்களை மேம்படுத்தும் ஊக்கச் சலுகைகளை வழங்குவதன் மூலம் தனியார்கூட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை ஈர்க்கும்.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும்.

    சிறு புனல் மின் திட்டங்களில் ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும்.

    சுற்றுச்சூழல் பற்றிய புரிதலை பொதுமக்களில் வளர்க்கும். இந்த கொள்கை 5 ஆண்டுகளுக்கு செயல்படும். தேவையெனில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

    கட்டுப்பாடுகள்

    இத்திட்டம் விதிக்கும் கட்டுப்பாடுகள்

    நீர் பயன்பாட்டை மீண்டும் அதே வழியில் திருப்பியளிக்க வேண்டும், மற்றும் ஓடையின் இயற்கையான பாதையில் குறைந்தபட்ச இடையூறு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கால்வாய்களில் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக நீரை திறப்பதற்கே மின்சார உற்பத்தி செய்யப்படும்.

    மின்சார உற்பத்திக்காக நீரை திறப்பது தொடர்பாக திட்ட மேம்பாட்டாளர்களுக்கு உரிமை கிடையாது.

    திட்ட மேம்பாட்டாளர்கள், ஒரு மெகாவாட் திறனை கொண்ட அமைப்புக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

    உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் 10 சதவீதத்தை அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

    உற்பத்தி இடத்திற்கும் மின் தொடரமைப்பிற்கும் இடையிலான மின்கடத்திகள் அமைப்பது மேம்பாட்டாளரின் பொறுப்பாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    அமைச்சரவை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    தமிழக அரசு

    காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தமிழக அரசின் 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு காங்கிரஸ்
    வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் அரசு பள்ளி
    சென்னையில் பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு சென்னை
    பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்காதவர்கள் கவனத்திற்கு! இந்தியா

    அமைச்சரவை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் ஆர்.என்.ரவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025