NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ; பின்னணி என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ; பின்னணி என்ன?
    தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ

    தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ; பின்னணி என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 02, 2024
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    சமூக ஊடக நிறுவனமான மெட்டா ஏஐ லக்னோவில் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

    21 வயதான அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு, கழுத்தில் கயிற்றை வைத்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகிய நிலையில், காவல்துறை தலைமை இயக்குனரக அலுவலகத்தின் சமூக ஊடக மையத்திற்கு மெட்டாவிடமிருந்து எச்சரிக்கை அலெர்ட் வந்தது.

    இதையடுத்து விரைவாக செயல்பட்ட காவல்துறை, உடனடியாக அந்த பெண்ணின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தற்கொலை செய்வதை தடுத்து பத்திரமாக மீட்டுள்ளனர்.

    காவல்துறை சென்று தடுக்கும் வரை, பெண்ணின் குடும்பத்தினருக்கு இதுகுறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.

    பின்னணி

    தற்கொலை முயற்சியின் பின்னணி

    அந்த பெண் தான் காதலித்து வந்த நபரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

    "இந்த திருமணம் சட்டப்பூர்வமாக செல்லாது என்பதால், அந்த நபர் பெண்ணை விட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்றார். இதனால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்" என்று காவல்துறை உதவி கமிஷனர் மோகன்லால் கஞ்ச் ரஜ்னீஷ் வர்மா கூறினார்.

    இந்நிலையில், பெண்ணை மீட்ட போலீசார் அந்த பெண்ணிடம் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர்.

    அதைத் தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், அவரை விட்டுச் சென்ற கணவர் கைது செய்யப்பட்டதாக கமிஷனர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெட்டா
    தற்கொலை
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மெட்டா

    தங்கள் AI கருவிகளில் அரசியல் உள்ளடக்கங்களை உருவாக்குவதைத் தடை செய்த மெட்டா செயற்கை நுண்ணறிவு
    வாட்ஸ்அப் சேனல்களுக்கு பிரத்தியேக பயனாளர் பெயர்கள், சோதனையில் புதிய அப்டேட் வாட்ஸ்அப்
    வாட்ஸ்அப் சேவையில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறதா மெட்டா? வாட்ஸ்அப்
    லாக் செய்யப்பட்ட சாட்களுக்கான ரகசியக் குறியீட்டு வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்

    தற்கொலை

    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய்  சேலம்
    தேசிய விருது வென்ற 'லகான்' திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் திடீர் மரணம் பாலிவுட்
    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம் நீட் தேர்வு

    உத்தரப்பிரதேசம்

    மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல்  காங்கிரஸ்
    பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம் விபத்து
    வீட்டுக்குள் புகுந்து 2 குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு  இந்தியா
    உத்தர பிரதேசம்: ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய குடும்பத்தை நடு தெருவில் வைத்து அவமானப்படுத்தும் வீடியோ வைரல்  இந்தியா

    இந்தியா

    ஏரியை ஆக்கிரமித்து கட்டிடம்? ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான மையம் இடிப்பு ஹைதராபாத்
    சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஓய்வூதியம்
    அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; மான் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் வழங்கினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025