NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம்: உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம்: உச்ச நீதிமன்றம் 

    பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கினால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம்: உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2024
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது அவர்களுக்கு வேலை கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அதுவே அவர்களுக்கு பாதமாக முடியவும் வாய்ப்புள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

    மேலும், இது நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மாதவிடாய் விடுப்புக்கான கொள்கைகளை வகுக்க மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கை(பிஐஎல்) விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "அத்தகைய விடுப்புகளை கட்டாயமாக்குவது பெண்கள் பணியிடத்தில் இருந்து ஒதுக்கப்படுவதற்கு வழிவகுக்கும். அதை நாங்கள் விரும்பவில்லை. பெண்களைப் பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இது அவர்களுக்குப் பாதகமாகமுடிய வாய்ப்பிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

    இந்தியா 

    மாதிரி கொள்கையை வடிவமைக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்

    "இது உண்மையில் அரசாங்கத்தின் கொள்கை பற்றியதாகும். அதை நீதிமன்றங்கள் முடிவு செய்ய முடியாது" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்த பிரச்சனை பல கொள்கை அம்சங்களுடன் தொடர்புடையது என்றும், இதில் நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    "இந்த கோரிக்கையை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளரிடமும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதியிடமும் எடுத்த செல்ல மனுதாரர்களை நாங்கள் அனுமதிக்கிறோம். இந்த விஷயத்தை கொள்கை அளவில் ஆராய்ந்து, அனைத்து பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து மாதிரி கொள்கையை வடிவமைக்குமாறு செயலாளரைக் கேட்டுக்கொள்கிறோம்." என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உச்ச நீதிமன்றம்

    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது தேர்தல் பத்திரங்கள்
    'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து  விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு  எஸ்பிஐ

    இந்தியா

    NEET-UG மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: அனைத்து விண்ணப்பதாரர்களின் தரவரிசைகளிலும் திருத்தம்  நீட் தேர்வு
    கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலையில் ரூ.31 குறைப்பு  வணிகம்
    டெல்லி விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததை அடுத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஆய்வு  டெல்லி
    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை  ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025