NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
    ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த முப்தியின் கட்சிக்கு ஸ்ரீநகர் நிர்வாகம் நேற்று அனுமதி மறுத்துவிட்டது

    'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

    எழுதியவர் Sindhuja SM
    Aug 05, 2023
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.

    இந்நிலையில், தன்னையும் பிற மூத்த பிடிபி தலைவர்களையும் அரசாங்கம் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    "இன்று பிற மூத்த பிடிபி தலைவர்களுடன் என்னையும் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள். நேற்று நள்ளிரவு நடந்த அடக்குமுறைக்குப் பிறகு, என் கட்சிக்காரர்கள் ஏராளமானோர் சட்டவிரோதமாக காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இயல்புநிலை குறித்து உச்சநீதிமன்றத்திடம் இந்திய அரசாங்கம் கூறி வருவது வெறும் சித்தப்பிரமையே" என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின்(பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

    எவ்லிய்ஜ்

     'உச்ச நீதிமன்றம் இதை கவனிக்கும் என்று நம்புகிறேன்': முப்தி 

    "ஒருபுறம், சட்ட விரோதமாக 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததைக் கொண்டாட காஷ்மீரிகளுக்கு அழைப்பு விடுக்கும் ராட்சத போர்டுகள் ஸ்ரீநகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், மக்களின் உண்மையான உணர்வை அழிக்க மிருக பலம் பயன்படுத்தப்படுகிறது. சட்டப்பிரிவு 370 விசாரணைக்கு வந்திருக்கும் நேரத்தில் இந்த புதிய பிரச்சனைகளை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கவனிக்கும் என்று நம்புகிறேன், "என்று அவர் மற்றொரு ட்வீட்டில் மேலும் கூறினார்.

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த முப்தியின் கட்சிக்கு ஸ்ரீநகர் நிர்வாகம் நேற்று அனுமதி மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    மெகபூபா முப்தி
    மத்திய அரசு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஜம்மு காஷ்மீர்

    நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்தியா
    காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி-வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் இந்தியா
    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ இந்தியா
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி

    மெகபூபா முப்தி

    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    மத்திய அரசு

    'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல் நீட் தேர்வு
    சமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி  மாநில அரசு
    வந்தே பாரத் ரயில் நிறத்தில் திடீர் மாற்றம் - மத்திய ரயில்வேத்துறை  வந்தே பாரத்
    GST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025