NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல்
    மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல் - தேசிய மருத்துவ ஆணையம்

    'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல்

    எழுதியவர் Nivetha P
    Jul 06, 2023
    05:44 pm

    செய்தி முன்னோட்டம்

    எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகளில் சேருவதற்கு தற்போதைய கல்வியாண்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான அரசின் ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் ஆகியவற்றுள் சேருவதற்கு நடத்தப்படும் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    வரும் ஜூலை 10ம் தேதி திங்கட்கிழமை தான் இந்த விண்ணப்பத்தினை மேற்கொள்ள கடைசி தேதியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எம்.பி.பி.எஸ்.மற்றும் பி.டி.எஸ்.பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டு முதல் 'நெக்ஸ்ட்' என்னும் தகுதி தேர்வினை அமலுக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தேர்வு 

    'நெக்ஸ்ட்' தேர்வு மாணவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் 

    இதன்படி, இந்த நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் தான், பயிற்சி மருத்துவராக பணியினை மேற்கொள்ள முடியுமாம்.

    2019ம் ஆண்டில் படித்த பேட்ச் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் இந்த செயல்முறை அமலுக்கு வருகிறதாம்.

    மேலும் இந்த தேர்வானது இரு தேர்வுகளாக மே மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, வரும் 28ம் தேதி இந்தியா முழுவதும் இதற்கான மாதிரி தேர்வு நடக்கவுள்ளது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    இதற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், நெக்ஸ்ட் தேர்வு மாணவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மத்திய அரசு இதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    இந்தியா
    மத்திய அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    இந்தியா

    நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு  சென்னை
    கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.61 லட்சம் கோடியாக அதிகரித்த GST வரி வசூல்  மத்திய அரசு
    இந்தியாவில் ஒரே நாளில் 53 கொரோனா பாதிப்பு கொரோனா
    போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்  பிரான்ஸ்

    மத்திய அரசு

    NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள்  இந்தியா
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மணிப்பூர்

    தமிழ்நாடு

    2024 நாடாளுமன்ற தேர்தலினையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம்  தேர்தல்
    தமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்கப்படும் தக்காளி தமிழக அரசு
    விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை சேலம்
    பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் பொறியியல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025