NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
    இந்தியா

    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    April 25, 2023 | 07:12 pm 1 நிமிட வாசிப்பு
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

    டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில் பாரத ராஷ்டிர சமிதியின் முன்னாள் ஆடிட்டர் புட்சி பாபு, அர்ஜுன் பாண்டே மற்றும் அமந்தீப் தால் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களைப் பற்றி சிபிஐ மேலும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம், இந்த வழக்கின் சாட்சியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 9 மணி நேரம் சிபிஐ விசாரித்தது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் பிஆர்எஸ் தலைவருமான கவிதாவையும் இந்த வழக்கில் சிபிஐ விசாரித்திருக்கிறது.

    ஆம் ஆத்மி ஒரு தேசியக் கட்சியாக மாறியுள்ளது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை: கெஜ்ரிவால்

    மதுபானக் கொள்கை வழக்கை "புனையப்பட்டது" என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி ஒரு தேசியக் கட்சியாக மாறியுள்ளது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களையும், எங்கள் நல்ல வளர்ச்சிப் பணிகளையும் களங்கப்படுத்தவே அவர்கள் இப்படி செய்கிறார்கள்." என்று கூறினார். சிசோடியாவும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தையும் மறுத்துள்ளார். மேலும், தனக்கு எதிராக சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று தனது ஜாமீன் மனுவில் தெரிவித்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆறு மாதங்களுக்கு முன், டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்கு பிறகு மணீஷ் சிசோடியா மீது FIR பதிவு செய்யப்பட்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    மத்திய அரசு
    டெல்லி

    இந்தியா

    உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா உலக கோப்பை
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இலங்கை
    வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!  கேரளா

    ஆம் ஆத்மி

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை  இந்தியா
    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் இந்தியா
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் பாஜக
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா

    மத்திய அரசு

    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  தமிழ்நாடு
    '40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ் தனுஷ்
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  சென்னை
    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  இந்தியா

    டெல்லி

    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இந்தியா
    WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள் இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    காலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023