NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2023
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.

    இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில் பாரத ராஷ்டிர சமிதியின் முன்னாள் ஆடிட்டர் புட்சி பாபு, அர்ஜுன் பாண்டே மற்றும் அமந்தீப் தால் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களைப் பற்றி சிபிஐ மேலும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த வாரம், இந்த வழக்கின் சாட்சியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 9 மணி நேரம் சிபிஐ விசாரித்தது.

    தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் பிஆர்எஸ் தலைவருமான கவிதாவையும் இந்த வழக்கில் சிபிஐ விசாரித்திருக்கிறது.

    details

    ஆம் ஆத்மி ஒரு தேசியக் கட்சியாக மாறியுள்ளது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை: கெஜ்ரிவால்

    மதுபானக் கொள்கை வழக்கை "புனையப்பட்டது" என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி ஒரு தேசியக் கட்சியாக மாறியுள்ளது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களையும், எங்கள் நல்ல வளர்ச்சிப் பணிகளையும் களங்கப்படுத்தவே அவர்கள் இப்படி செய்கிறார்கள்." என்று கூறினார்.

    சிசோடியாவும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தையும் மறுத்துள்ளார். மேலும், தனக்கு எதிராக சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று தனது ஜாமீன் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

    ஆறு மாதங்களுக்கு முன், டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்கு பிறகு மணீஷ் சிசோடியா மீது FIR பதிவு செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா
    ஐபிஎல்: தர்மசாலாவிலிருந்து வீரர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்து வர பிசிசிஐ முடிவு ஐபிஎல் 2025
    ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம் பாகிஸ்தான்

    இந்தியா

    காவிரி குடிநீர் குழாய் பாதிப்பு - 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு! திருப்பூர்
    உலகக்கோப்பை வில்வித்தை 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா இந்திய அணி
    ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்! உலகம்
    அட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்  வைரல் செய்தி

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா

    மத்திய அரசு

    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு! தொழில்நுட்பம்
    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்
    ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு ஆதார் புதுப்பிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025