NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம்
    மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக இனக்கலவரம் நடந்து வருகிறது.

    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 30, 2023
    09:22 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் வாழும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை மணிப்பூர் அரசு கைப்பற்றத் தொடங்கியுள்ளது.

    மணிப்பூரில் நடக்கும் இன மோதல்களுக்கு, மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உதவி செய்வதாக கூறப்படுகிறது.

    சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் போதைப்பொருள் பயங்கரவாதத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

    மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி, மணிப்பூரில் வசிப்பவர்களின் பயோமெட்ரிக் தரவுகள் செப்டம்பர் இறுதிக்குள் கைப்பற்றப்படும் என்று மணிப்பூர் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பயோமெட்ரிக் தரவுகளை கைப்பற்றுவது குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்(NCRB) குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

    ட்ஜ்க்க்

    2 நாட்களில் இந்தியாவுக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டினர் 

    "மணிப்பூரில் உள்ள அனைத்து சட்டவிரோத மியான்மர் குடியேற்றவாசிகளின் பயோமெட்ரிக் தரவுகளும் வெற்றிகரமாக கைப்பற்றப்படும் வரை அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் தொடரும். செப்டம்பர் 2023க்குள் இதை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக இனக்கலவரம் நடந்து வருகிறது.

    இதற்கிடையில், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக மணிப்பூர் வழியாக இந்தியாவிற்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    கடந்த ஜூலை-22 மற்றும் 23ஆம் தேதிகளில் மட்டும் மியான்மரை சேர்ந்த 718 பேர் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்று அசாம் ரைபிள்ஸ் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    மியான்மர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மணிப்பூர்

    "இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம் ராகுல் காந்தி
    கிழித்தெறியப்பட்ட ராஜினாமா கடிதம்! முடிவை வாபஸ் பெற்ற மணிப்பூர் முதல்வர் கலவரம்
    மணிப்பூர் கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    மணிப்பூர் மாநில கொடியை ஏந்தியதால் சர்ச்சை; விளக்கமளித்த இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன் கால்பந்து

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025