NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர்: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர்: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி 
    பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் எஸ்.சுராசந்த் சிங் ஒரு சுதந்திர போராளி ஆவார்.

    மணிப்பூர்: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 23, 2023
    12:05 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் முழுவதும் இனக்கலவரம் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் கக்சிங் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட மற்றொரு பயங்கரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த சம்பவம் மே 28ஆம் தேதி அதிகாலை, கக்சிங் மாவட்டத்தின் செரோவ் கிராமத்தில் நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    செரோ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கின்படி, மே 28ஆம் தேதி ஆயுதமேந்திய ஒரு கும்பல் 80 வயது மதிக்கத்தக்க இபெடோம்பி என்ற பெண்ணை, அவரது வீட்டிற்குள் அடைத்து வீட்டை தீ வைத்து எரித்தனர்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் எஸ்.சுராசந்த் சிங் ஒரு சுதந்திர போராளி ஆவார்.

    ஜ்வ்க்

    'என்னை கூட்டி செல்ல திரும்பி வாருங்கள்': உயிரிழந்தவரின் கடைசி வார்த்தைகள் 

    சுராசந்த் சிங், 80-வயதில் காலமாவதற்கு முன், சுதந்திர போராட்டத்தில் தனது பங்களிப்பிற்காக முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

    அவரது மனைவி இபெடோம்பிக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து அவர்களது பேரன் பிரேம்காந்தா NDTV செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

    வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்ததால் இபெடோம்பியின் குடும்பத்தார் அந்த பகுதியை விட்டு முதலில் தப்பி ஓடிவிட்டனர்.

    "நாங்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது, ​​​​என் பாட்டி எங்களை தப்பி ஓடச் சொன்னார். சிறிது நேரம் கழித்து அவர்களை மீட்க திரும்பி வர வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். 'என்னை கூட்டி செல்ல திரும்பி வாருங்கள்,' என்பது தான் அவரது கடைசி வார்த்தைகளாக இருந்தது." என்று அவரது பேரன் பிரேம்காந்தா கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    கலவரம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025