NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி 

    டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2024
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    கேஷப்பூர் மண்டி அருகே டெல்லி ஜல் போர்டு ஆலைக்குள் இருந்த 40 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் இன்று உயிரிழந்ததாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் இறந்து கிடந்தார் என்று அவர் கூறியுள்ளார்.

    "முதற்கட்ட தகவலின்படி, இறந்தவர் சுமார் 30 வயதுடைய ஆண் ஆவார். அவர் எப்படி போர்வெல் அறைக்குள் நுழைந்தார், எப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்தார் என்பதை போலீசார் விசாரிப்பார்கள்" என்று அமைச்சர் அதிஷி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    மேலும், அந்த நபரை மீட்க முயற்சித்த தேசிய பேரிடர் மீட்புப் படைக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

    டெல்லி 

    ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைக்க உத்தரவு 

    பிற்பகல் 3 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து அந்த நபரின் உடல் மீட்கப்பட்டது.

    அவரை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    இன்று அதிகாலை 1.15 மணியளவில், யாரோ ஒருவர் திருவாடுவதற்காக தங்கள் அலுவலகத்திற்கு நுழைந்து பின்னர் அவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டதாக ஜல் போர்டு ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    NDRF மற்றும் டெல்லி காவல்துறையின் குழுக்களுடன் மொத்தம் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அனைத்து பயன்படுத்தப்படாதா ஆழ்துளைக் கிணறுகளுக்கும் 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    டெல்லி

    'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன? எம்எஸ் தோனி
    ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது  ரஷ்மிகா மந்தனா
    அயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்  அயோத்தி
    குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரான்ஸ்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025