NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு 

    டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 29, 2024
    07:07 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் ஓக்லாவில் வெள்ளம் சூழ்ந்த ஒரு பாதாள சாக்கடையில் மூழ்கி 60 வயது முதியவர் உயிரிழந்தார்.

    மேலும், டெல்லியில் மழைநீர் பள்ளத்தில் இருந்து இரண்டு சிறுவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் பிற்பகல் 2:30 மணியளவில் நடந்துள்ளது.

    சிராஸ்பூர் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இரண்டு சிறுவர்கள் மழைநீரில் விளையாட சென்றுள்ளனர்.

    முதற்கட்ட தகவல்களின்படி, அவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    "சம்பவ இடத்திற்கு சென்றபோது, ​​மெட்ரோ அருகே உள்ள சுரங்கப்பாதையில் கிட்டத்தட்ட 2.5-3 அடி தண்ணீர் நிரம்பியிருப்பது தெரிந்தது. தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி உடல்களை மீட்டனர். இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளது.

    டெல்லி 

    லெப்டினன்ட் கவர்னர் நேரில் சென்று ஆய்வு 

    சிராஸ்பூர் பகுதியில் உள்ள பள்ளத்தில் சுமார் 2.5 அடி ஆழத்தில் மழைநீர் தேங்கி இருந்தது.

    "சிஆர்பிசி பிரிவு 174 இன் கீழ் விசாரணை நடந்து வருகிறது" என்று போலீசார் தெரிவித்தனர்.

    நேற்றிரவு முதல் டெல்லியில் இடைவிடாத இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மொத்தம் 228.1 மிமீ மழை பெய்துள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா இன்று ஆய்வு நடத்தினார்.

    மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க வடிகால்களில் தூர்வாருவதை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சக்சேனா உத்தரவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    கனமழை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டெல்லி

    ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல் அரவிந்த் கெஜ்ரிவால்
    6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 57.7% வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் அடிதடி  பொதுத் தேர்தல் 2024
    டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி, உரிமையாளர் மீது வழக்கு மருத்துவமனை
    இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு  ஆம் ஆத்மி

    கனமழை

    நிவாரண பொருட்களை இலவசமாக அரசு விரைவு பேருந்துகளில் அனுப்பலாம் - தமிழக அரசு  தமிழக அரசு
    ரூ.6,000 நிவாரணத்தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படவில்லையா?-காரணம் அறிவோம் தமிழ்நாடு
    ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன? வெள்ளம்
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்  திருச்செந்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025