Page Loader
ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம்
அவர் கொல்கத்தா திரும்பி கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம்

எழுதியவர் Sindhuja SM
Jun 28, 2023
08:17 am

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஜூன் 27) மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக வடக்கு வங்காளத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தில் தரையிறங்கியதால், முதல்வர் பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை தொடரும் என்று கலந்துகொண்ட மருத்துவர்களிடம் கூறிவிட்டார். ஒரு அரசியல் பேரணியில் உரையாற்றுவதற்காக பானர்ஜி ஜல்பைகுரி மாவட்டத்திற்கு நேற்று சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு அவர் கொல்கத்தா திரும்பி கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ந்ச்ஜ்ட்ன்

'கரடுமுரடான வானிலையே இதற்குக் காரணம்': திரிணாமுல் காங்கிரஸ் 

"மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனால், அவர் காயமடைந்தார். கரடுமுரடான வானிலையே இதற்குக் காரணம்" என்று திரிணாமுல் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஹெலிகாப்டர் பைகுந்தபூர் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ​​இடியுடன் கூடிய மழை பெய்ததாகவும், அதை சமாளித்த விமானி பாதுகாப்பாக அந்த ஹெலிகாப்டரை ஒரு விமான தளத்தில் தரையிறக்கியதாகவும் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் வடக்கு வங்காளத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் விரைவில் குணமடைய ட்விட்டரில் வாழ்த்தி இருக்கிறார்.