
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார்
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி, மும்பையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.
முன்னதாக மனோகர் ஜோஷி, பிப்ரவரி 21-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.02 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
மனோகர் ஜோஷியின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் தொடங்கும் என்றும், அவரது உடல், அரசு மரியாதையுடன் தாதர் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மனோகர் ஜோஷி, மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக கூட்டணியின் கீழ் 1995-1999 வரை முதல்வராக பதவி வகித்தார். 2002- 2004 வரை மக்களவை சபாநாயகராக இருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
மனோகர் ஜோஷி காலமானார்
Former Lok Sabha speaker Manohar Joshi passes away at 86
— Argus News (@ArgusNews_in) February 23, 2024
(ANI)#ManoharJoshi #Maharashtra #Mumbai pic.twitter.com/3HjZYfnx9W