NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP
    அடுத்த செய்திக் கட்டுரை
    அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP
    சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், நேற்று திடீரென்று ஆளும் பாஜக அரசுடன் இணைந்தார்.

    அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP

    எழுதியவர் Sindhuja SM
    Jul 03, 2023
    09:59 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவாருக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தகுதி நீக்க மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவின் மிக முக்கிய எதிர் கட்சியாகும்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சரத் பவாரும் அஜித் பவாரும் அக்கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் ஆவர்.

    அவர்கள் இருவரும் அரசியல் தலைவர்கள் எனபதையும் தாண்டி மிக நெருங்கிய உறவினர்களும் கூட.

    இந்நிலையில், சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், நேற்று திடீரென்று ஆளும் பாஜக அரசுடன் இணைந்தார்.

    இந்த விஷயம் சரத் பவாருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    பிபிட்

    தகுதி நீக்க மனுக்கள் மாநில சட்டப்பேரவைக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது

    நேற்று 8 NCP எம்எல்ஏக்களுடன் பாஜக அரசுடன் கைகோர்த்த அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வர்களாக பதவியேற்றார்.

    அவருடன் வந்த 8 NCP எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

    1999ஆம் ஆண்டு சரத் பவாரால் ஆரம்பிக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரும் பிளவால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்நிலையில், NCP தலைவரான ஜெயந்த் பாட்டீல், பாஜக கூட்டணி அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்ற அஜித் பவார் மற்றும் 8 பேருக்கு எதிராக தகுதிநீக்க மனுக்களை NCP தாக்கல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    "ஒன்பது எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்களை மாநில சட்டப்பேரவைக்கு அஞ்சல் மூலம் NCP அனுப்பியுள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    அரசியல் நிகழ்வு
    பாஜக

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா

    பாஜக

    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு
    மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள்  இந்தியா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025