LOADING...
வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ₹1.9 லட்சம் இழந்த அரசு ஊழியர்
வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ரூ.1.9 லட்சம் இழந்த நபர்

வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ₹1.9 லட்சம் இழந்த அரசு ஊழியர்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2025
08:15 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர், வாட்ஸ்அப் வழியாக வந்த திருமண அழைப்பிதழை கிளிக் செய்ததால் ₹1.9 லட்சம் பணத்தை இழந்துள்ளார். அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு திருமணத்திற்கான அழைப்பிதழை அந்த ஊழியர் பெற்றுள்ளார். அந்த அழைப்பிதழ் ஒரு PDF கோப்பு போல் தோன்றினாலும், அது உண்மையில் ஒருவரின் மொபைலை ஹேக் செய்வதற்கான APK கோப்பு ஆகும். பாதிக்கப்பட்டவர் அந்த கோப்பை கிளிக் செய்தபோது, சைபர் குற்றவாளிகள் அவரது மொபைல் ஃபோனில் இருந்து தனிப்பட்ட தரவுகளை திருடி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ₹1.9 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து ஹிங்கோலி காவல் நிலையத்திலும் சைபர் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைபர் கிரைம்

தானேவில் சைபர் கிரைம் மோசடி கும்பல்

இதேபோல், மகாராஷ்டிராவின் தானேவில் ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பல் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. வேலை தேடுபவர்களை குறிவைத்து, அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளை முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி செய்த ஏழு பேர் கோவாவில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி கும்பல், போலியான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தியுள்ளது. இந்த வழியில் குறைந்தது 80 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். போலியான கோப்புகளை அனுப்புவதன் மூலம் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது மற்றும் போலியான வேலை வாய்ப்புகளை வழங்குவது போன்ற சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.