NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் - மா.சுப்ரமணியம் தகவல்

    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023
    07:46 pm

    செய்தி முன்னோட்டம்

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் இன்று நிரூபர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 200 ஏக்கர் நிலத்தினை அப்போதைய அதிமுக அரசு அளித்தது.

    இதனையடுத்து மத்திய அரசு கூடுதலாக 22ஏக்கர் நிலம் கேட்டது.

    அந்த நிலத்தை கொடுக்க நாடாளுமன்றம் தாமதப்படுத்தியதால் தான் கட்டுமான பணிகள் துவங்காமல் நின்று போனது என மத்திய மந்திரி கூறியதை ஏற்க முடியாது.

    தமிழக முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என தொடர்ந்து பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறார் என கூறினார்.

    மதுரையையடுத்து கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    ஜப்பான் நிறுவனம்

    2028ம் ஆண்டு தான் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தகவல்

    இதனை தொடர்ந்து பேசிய அவர், மதுரையை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    ஆனால் தமிழகத்திற்கு மட்டும் ஜப்பான் ஜைக்கா நிறுவனம் நிதி வழங்கும் என கூறுகிறார்கள்.

    நான் சென்ற வாரம் ஜப்பான் சென்றிருந்த பொழுது, மதுரை எய்ம்ஸ்க்கு உடனடியாக நிதி அளிக்க கோரினோம்.

    அதற்கு கூட்டத்தில், இதன் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டு இறுதியில் துவங்கி 2028ம் ஆண்டு தான் நிறைவு பெறும் என்று கூறினார்கள் என்பதை தெரிவித்தார்.

    மேலும் இது தான் உண்மை நிலவரம், மருத்துவமனை பணிகள் முடிந்துவிட்டது என்று மத்திய அரசு கூறுவது சரியானது அல்ல என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    சென்னை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா

    சென்னை

    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்
    போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி! தமிழ்நாடு செய்தி
    இந்தியாவில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழலுள்ள நகரங்கள் பட்டியல் - சென்னை முதலிடம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025