Page Loader
முருகன் பக்தர்கள் மாநாட்டிற்கான இ-பாஸ் விதியை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
முருகன் பக்தர்கள் மாநாட்டிற்கான இ-பாஸ் விதியை ரத்து செய்தது நீதிமன்றம்

முருகன் பக்தர்கள் மாநாட்டிற்கான இ-பாஸ் விதியை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2025
06:44 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாகனங்களுக்கு கட்டாய இ-பாஸ் தேவை என்பதை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் மிகப்பெரிய அளவிலான ஆன்மீக நிகழ்வாக முழு வீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

முருகனின் ஆறு தலங்களைக் குறிக்கும் அரங்குகள் அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும், ஆன்மீகக் கூட்டம் அரசியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்ற நிபந்தனைகள் உட்பட, மாநாட்டிற்கான வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வெளியிட்டிருந்தது.

வழக்கு

இந்து முன்னணி உறுப்பினர் வழக்கு

இ-பாஸ் தேவையை எதிர்த்து, இந்து முன்னணி உறுப்பினர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார்.

மனுவை பரிசீலித்த பிறகு, மாநாட்டில் கலந்து கொள்ளும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கும் நிபந்தனையை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இருப்பினும், அனைத்து வாகனங்களும் காப்பீடு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இவற்றை காவல்துறையினரிடம் காட்டி பதிவு செய்யப்பட்ட பின்னர் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், வாகன நிறுத்துமிடங்களுக்குள் காவல்துறையினர் ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.