NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டை செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Nov 09, 2023
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் சூதாட்டம் போன்ற ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல சர்ச்சைகளுக்கு பின்னர் கால தாமதமாக ஒப்புதல் வழங்கினார்.

    அதனையடுத்து இதுகுறித்த அரசாணையினை மாநில அரசு வெளியிட்டது.

    இந்நிலையில் இந்த சட்டத்தினை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

    அதன்படி இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அமர்வின் முன்னிலையில் வந்தது.

    தடை 

    ஆன்லைன் ரம்மி-போக்கர் விளையாட்டுக்கான தடை ரத்து

    அப்போது, இதுபோன்ற தடை சட்டத்தினை இயற்றி அமல்படுத்த அரசுக்கு அதிகாரமில்லை.

    திறமைக்கான விளையாட்டாக பார்க்கப்படும் ரம்மி, அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக பார்க்க முடியாது என்று பல்வேறு வாதங்களை சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் முன்வைத்தது.

    இதனைத்தொடர்ந்து, இச்சட்டத்தினை இயற்ற அரசுக்கு அதிகாரமுள்ளது,

    இந்த விளையாட்டால் தற்கொலை உள்ளிட்ட விவகாரங்கள் அதிகரித்ததன் காரணமாகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது என்று அரசு தரப்பில் வாதாடப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்ததோடு எழுத்துப்பூர்வமாக பெறப்பட்ட பின்னர் நீதிபதிகள் இவ்வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    இதனிடையே, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று(நவ.,9)வெளியாகியுள்ளது.

    அதில், அதிர்ஷ்டத்திற்கான ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும். அதேசமயம், திறமைக்கான ஆன்லைன் ரம்மி-போக்கர் விளையாட்டுக்கான தடை ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் விளையாட்டு
    சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்.என்.ரவி
    தற்கொலை

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    ஆன்லைன் விளையாட்டு

    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை தமிழ்நாடு
    ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக வழக்கு - உயர் நீதிமன்றத்தில் முறையீடு  இந்தியா
    ஆன்லைன் விளையாட்டுக்களில் வெல்லும் பரிசுத்தொகைக்கு வரிப்பிடித்தம்.. CBDT-யின் புதிய அறிவிப்பு என்ன? பொழுதுபோக்கு
    வரி ஏய்ப்பு செய்யும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் சேவைகளை முடக்க நடவடிக்கை? ஜிஎஸ்டி

    சென்னை உயர் நீதிமன்றம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி: நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செந்தில் பாலாஜி
    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள் செந்தில் பாலாஜி
    கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு  விருதுநகர்
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு  செந்தில் பாலாஜி

    ஆர்.என்.ரவி

    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு தமிழ்நாடு
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு
    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025