NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி 
    உஜ்வாலா(PMUY) திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டரின் விலை ரூ.400 குறைக்கப்பட உள்ளது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 29, 2023
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

    இந்த அமைச்சரவை கூட்டத்தை முடித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    ஓணம் மற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு, பிரதமர் மோடி நாட்டு பெண்களுக்கு வழங்கும் பரிசு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், உஜ்வாலா(PMUY) திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டரின் விலை ரூ.400 குறைக்கப்பட உள்ளது.

    "உஜ்வாலா திட்டத்தின் மூலம் 9.6 கோடி பெண்கள் பயனடைகின்றனர். ஓணம் மற்றும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு, பெண்களுக்கு பிரதமர் ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

    துபிஷா

    75 லட்சம் புதிய எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்: மத்திய அரசு 

    "வீட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பயனர்களுக்கும் நம் நாட்டுப் பெண்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் பரிசு இது" என்று தாக்கூர் மேலும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், PMUY திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    மே 2016இல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா(PMUY) திட்டம், அரசாங்கத்தின் ஒரு முக்கிய சமூக நல முயற்சியாக இருந்து வருகிறது.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருள் வழங்குவதே இதன் நோக்கமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    இந்தியா

    3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் உலக சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்
    சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள் சந்திரயான் 3
    BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு பிரதமர் மோடி
    இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு வணிகம்

    மத்திய அரசு

    85% பேர் பழைய வருமான வரிமுறையையே தேர்ந்தெடுத்திருப்பதாக புதிய அறிக்கையில் தகவல் வருமான வரி விதிகள்
    ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது  மக்களவை
    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025