NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி 
    லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி

    லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி 

    எழுதியவர் Nivetha P
    Jul 09, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    மென்பொருள் பொறியாளராக பெங்களூர் தனியார்நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் அகாங்ஷா.

    இவர் தனது காதலரான அர்பித்குஜரால் என்பவருடன் லீவ்இன்-டூகெதர்-உறவில் இருந்துள்ளனர், இருவருக்கும் இடையே சிலமாதங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டதால் தங்கள் உறவை முறித்துக்கொண்டுள்ளனர்.

    இதனிடையே கடைசியாக ஒருமுறை பார்க்கவேண்டும் என்றுகூறி அர்பித் டெல்லியிலிருந்து அகாங்ஷாவை பார்க்க பெங்களூருக்கு கடந்த ஜூன்.6ம்தேதி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அகாங்ஷாவை கொலை செய்யும் நோக்கில் வந்தஅவர் வண்டியில் வந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து நடந்தேச்சென்றுள்ளார்.

    தொடர்ந்து,வீட்டில் தனியேயிருந்த அகாங்ஷாவை தலையணை வைத்து கொலைச்செய்த அர்பித், இவ்விவகாரம் வெளிவரும்வரை ஆங்காங்கே தலைமறைவாகயிருந்துள்ளார்.

    காவல்துறையிடம் சிக்காமல் தெளிவாக கொலை செய்யத்திட்டமிட்ட அர்பித்,முன்னதாக டெல்லியிலேயே தனது மொபைல்போனை வைத்துவிட்டு வந்துள்ளார்.

    நேரடியாக பெங்களூர் வராமல் விஜயவாடாவில் தனது துணிகளை அங்கே வைத்துவிட்டு வந்துள்ளார்.

    க்ரைம் 

    கடந்த 20 நாட்களில் தான் பயணம் மேற்கொண்ட அனைத்து டிக்கெட்களையும் காண்பித்த காதலன் 

    கொலை செய்தப்பின்னர் 8 கி.மீ.,நடந்தே ரயில்நிலையத்திற்கு சென்று, ஹைதரபாத் வழியே அசாம் சென்று தினக்கூலியாக வேலைச்செய்துள்ளார்.

    அங்கிருந்து மீண்டும் விஜயவாடாவிற்கு சென்ற அர்பித் தனது நண்பருக்கு சொந்தமான இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

    இந்நிலையில், இவ்வழக்கினை விசாரித்த காவல்துறை அர்பித் நண்பர் மூலம் அர்பித்தின் தாயாரை அணுகி, அவர்மூலம் டெல்லியில் தலைமறைவாக இருந்த அர்பித் குஜராலை கைது செய்துள்ளார்கள்.

    காவல்துறையிடம் தனக்கும் இக்கொலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றுக்கூறிய அர்பித், திரைப்படப்பாணியில் கடந்த 20 நாட்களில் தான் பயணம் மேற்கொண்ட அனைத்து டிக்கெட்களையும் காண்பித்துள்ளார்.

    பின்னர் காவல்துறை தனது பாணியில் விசாரணைச்செய்ததும், உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

    தன்னைவிட்டு பிரிந்த அகாங்ஷா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காக கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    பெங்களூர்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  செந்தில் பாலாஜி
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் இந்தியா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை

    காவல்துறை

    டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது  டெல்லி
    ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை  காவல்துறை
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம்  சென்னை

    காவல்துறை

    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது  ஜம்மு காஷ்மீர்
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர் அமெரிக்கா
    பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025