NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
    37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 28, 2024
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை எழுப்பியுள்ளார்.

    செப்டம்பர் 21 அன்று மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

    ராகுல் காந்தி தனது கடிதத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா இந்த பகுதியில் சிறு-குறு மீனவர்களின் அவல நிலையை எடுத்துரைத்து, இந்த விவகாரத்தை தனது கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

    இந்த மீனவர்கள் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது கவலையளிக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    நடந்தது என்ன?

    கடலில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணி

    மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், ஆபத்தில் சிக்கிய இலங்கைப் படகை மீட்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

    இலங்கை அதிகாரிகளிடம் உதவி பெற அவர்கள் முயற்சித்த போதிலும், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    சம்பவத்தின் போது மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டன. ராகுல் காந்தி தனது கடிதத்தில் மீனவர்களை விடுவிப்பதற்கும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்பப் பெறுவதற்கும் விரைவான இராஜதந்திர முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தி, இந்த விஷயத்தில் அரசாங்கம் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    நாம் நமது மீனவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்று ராகுல் காத்து கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    மீனவர்கள்
    தமிழகம்
    இந்தியா

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    ராகுல் காந்தி

    "இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம்  இந்தியா
    'ஆட்சி மாறினால் ஜனநாயகத்தை சிதைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்': ராகுல் காந்தி சூளுரை காங்கிரஸ்
    நேற்று வரை ராகுல்..இன்று முதல் மோடி..பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் பாஜக
    பங்குச் சந்தைகள், ரூ.55,000 ரொக்கம்: ராகுல் காந்தி தாக்கல் செய்த ரூ.20 கோடி சொத்து மதிப்புள்ள பத்திர பிரமாணம் காங்கிரஸ்

    மீனவர்கள்

    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை அறிக்கை

    தமிழகம்

    மீண்டும் தமிழகத்திற்கு வருகிறதா ஃபோர்ட் நிறுவனம்? அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின் ஃபோர்டு
    5,000 சிறு பாசன குளங்களை புனரமைக்க ₹500 கோடியை ஒதுக்கியுள்ள தமிழக அரசு  தமிழக அரசு
    தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்; தென்மாவட்டங்களில் மிதமழைக்கு வாய்ப்பு மழை
    4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு பேருந்துகள்

    இந்தியா

    வணிக செயல்பாடுகளை மேம்படுத்த தனி செயற்கை நுண்ணறிவு பிரிவு; மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு மஹிந்திரா
    ஓபன் செஸ் ஒலிம்பியாட்டில் முதல்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா செஸ் போட்டி
    லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி பிரதமர் மோடி
    வாரத்தொடக்கத்திலேயே புதிய உச்சம்; இந்திய பங்குச் சந்தைகள் அபாரம் பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025